Monday, 5 March 2012

நிம்மதி எனும் மகிழ்ச்சி...


நிம்மதி எனும் மகிழ்ச்சி...

  

'சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே. நிம்மதியாக வாழ முயற்சி செய். உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்.'எங்கோ வாசித்த இந்த வரிகளின் ஆழத்தில் நிம்மதியும் சந்தோஷமும் மறைந்திருந்து தம் பொருளை உணர்த்தி நிற்கின்றன.

உலக வாழ்க்கையின் அலங்காரங்கத்தில் சந்தோஷமே நிரந்தரக் குறியீடாக இருக்கின்றது.ஒரு ஒற்றைச் சந்தோஷத்திற்காக மனிதன் என்னென்ன வெல்லாமோ செய்து விடுகின்றான்.தன் சிந்தனையின் எல்லாத் தொலை வுகளிலும் அது பற்றிய நினைவுகளையே வேலிகளாக போட்டு வைத்தி ருக்கிறான்.

இந்த உலக வாழ்க்கையை வெளிப்பார்வையில் பார்க்கும் ஒருவன் அதனைப் பிரமாண்டமாகவே கண்டு கொள்கிறான்.அதன் வளைவை, தொய்வை, நிச்சய மின்மையை அவன் காணத்தவறிவிடுகிறான்.

வாழக்கை பற்றிய புரிதலற்றவன் சந்தோஷமாக இருக்கிறான்.வாழ்க்கையை சரியாகப் புரிந்தவன் நிம்மதியாக இருக்கிறான்.வாழ்க்கை பற்றிய புரிதலி னடியாகவே நிம்மதியும் சந்தோஷமும் தோன்றுவதாகத் தெரிகிறது.

சந்தோஷம் நீடித்து நிலைப்பதில்லை.அது கணப் பொழுது வாழ்க்கை போலத்தான்.வருவதும் போவதும்,திடீரெனத் தோன்றி மறைவதும்தான் அதன் இயல்பு.மேக உருமாற்றம் போல அது தன்னை எப்போதும் மாற்றிக் கொண்டுதான் இருக்கின்றது.

நிம்மதி என்பது ஆளற்ற தனித் தீவு மாதிரி.பாரிய அலைகளை உண்டாக்கும் கடல்களுக்கு மத்தியிலும் தன் தனித்தன்மையுடன் அது நிற்கின்றது.எந்த சப்தமும் அதன் நிசப்தத்தை கலைத்து வடுவதில்லை.

மனிதன் நிம்மதியை முற்படுத்தாமல் சந்தோஷத்தை முற்படுத்தியதே அவன் கவலையைப் பெற்றுக் கொள்ளக் காரணமாகியது.அவ்வப்போதைய சந்தோ ஷங்களுக்காக மனிதன் நெடுநாள் நிம்மதியை தொலைத்துக் கொள்கி றான்.பின்னர் ஏமாற்றங்களைச் சந்தித்தபின் எதிர்பார்ப்பில்லாமல் வாழக் கற்றுக்  கொள்கிறான்.

நிம்மதியென்பது சந்தோஷத்தினடியாக மட்டும் வருவதல்ல.ஒரு நியாயமான கவலையும் நிம்மதியைக் கொண்டு வந்து தர முடியும்.நிம்மதி என்பது எப்போதும் இருப்பது.மகிழ்ச்சியும் கவலையும் வந்து போகக் கூடியது. இதனைத்தான் நபியவர்கள் “ஒரு முஃமின் நிலை ஆச்சரியத்திற்கு ரியது...மகிழ்ச்சியான ஏதும் நடந்தால் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்து கிறான்.துன்பங்கள் ஏதும் நடந்தால் பொறுமையாக இருக்கிறான்“(முஸ்லிம்) எனக் கூறினார்கள்.

மனிதன் உலகிற்கு வந்த நோக்கத்தை புரிந்து உணர்ந்து கொள்ளும் போதுதான் சந்தோஷத்தையும் நிம்மதியையும் மிகச் சரியாகப் அறிந்து கொள்கிறான். இதனையே அல்லாஹ் ;அல்லாஹ்வை நினைவுபடுத்துவதன் மூலம் உள்ளங்கள் அமைதியடைகின்றன' என்கிறான்

உள்ளமே உயர்ந்திடு


உள்ளமே உயர்ந்திடு




வாழ்க்கைச் சூழல்கள் ஒட்டி நிற்கின்ற எட்டு காரியங்களை ஒரே வசனத்தில் பொதிந்து, இறைவன் மனிதனின் விருப்பங்களை இதோ இவ்வாறு கேட்கின்றான்:
(நபியே) நீர் கூறும்: உங்களுடைய தந்தைமார்களும், உங்களுடைய பிள்ளைகளும், உங்களுடைய சகோதரர்களும், உங்களுடைய மனைவிமார்களும், உங்களுடைய குடும்பத்தார்களும், நீங்கள் திரட்டிய செல்வங்களும், நஷ்டம் (எங்கே) ஏற்பட்டு விடுமோ என்று நீங்கள் அஞ்சுகின்ற (உங்கள்) வியாபாரமும், நீங்கள் விருப்பத்துடன் வசிக்கும் வீடுகளும், அல்லாஹ்வையும் அவன் தூதரையும் அவனுடைய வழியில் அறப்போர் புரிவதையும் விட உங்களுக்கு பிரியமானவையாக இருக்குமானால், அல்லாஹ் அவனுடைய கட்டளையை (வேதனையை)க் கொண்டு வருவதை எதிர்பார்த்து இருங்கள் – அல்லாஹ் பாவிகளை நேர்வழியில் செலுத்துவதில்லை. (சூரா அத்தவ்பா9:24)
தந்தைமார்கள், பிள்ளைகள், சகோதரர்கள், மனைவிமார்கள், குடும்பத்தார்கள், செல்வம், வியாபாரம், வீடு – இவை ஒரு மனிதனின் சிந்தனையில் எப்பொழுதும் நிறைந்திருப்பவை.
இந்த அம்சங்கள் ஒன்று சேர்ந்து மனிதனை ஒரு வளையத்திற்குள் மாட்டி விட்டுள்ளன.
இந்த வளையத்திற்கு வெளியே அந்த அம்சங்களுக்கு ஆதரவான சில விஷயங்களும் உள்ளன. அவை சடங்குகளும், சம்பிரதாயங்களும் அடங்கிய உலகம்.
இந்த இரண்டு கூடுகளுக்கிடையில் வேலிகள் இல்லை. ஒன்றிலிருந்து இன்னொன்றுக்கு மனிதன் விருப்பப்பட்ட பொழுதெல்லாம் மாறிக்கொள்கின்றான்.
இந்தக் கூடுகளுக்கு அப்பாற்பட்டு யதார்த்தங்களைக் கொண்ட இன்னொரு உலகம் உண்டு. அங்கேதான் சரியும், தவறும் – நன்மையும், தீமையும் வேறு பிரிந்து நிற்கின்றன.
சமுதாயத்தில் இருக்கவேண்டியது நன்மையா, தீமையா என்பது அங்கேதான் தீர்மானிக்கப்படுகிறது. மேலாதிக்கம் செலுத்துவதற்கான போராட்டங்கள் அங்கேதான் அரங்கேறுகின்றன. சண்டை, சச்சரவுகள் சதா நடக்கின்றன.
வாழ்க்கையில் அன்றாடம் நடக்கும் இந்த விஷயங்கள் குறித்து மக்காவிலுள்ள குறைஷிகளுக்கு அல்லாஹ் கீழ்க்கண்ட வசனத்தில் இவ்வாறு போதிக்கின்றான்:
(ஈமான் கொள்ளாத நிலையில்) ஹாஜிகளுக்குத் தண்ணீர் புகட்டுவோரையும் கஃபத்துல்லாஹ்வை (புனிதப் பள்ளியை) நிர்வாகம் செய்வோரையும் அல்லாஹ்வின் மீதும் இறுதிநாள் மீதும் ஈமான் கொண்டு, அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிந்தோருக்குச் சமமாக ஆக்கிவிட்டீர்களா? அல்லாஹ்வின் சமூகத்தில் (இவ்விருவரும்) சமமாக மாட்டார்கள் – அநியாயக்காரர்களை அல்லாஹ் நேர்வழியில் செலுத்தமாட்டான். (சூரா அத்தவ்பா9:19)
தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கும், சடங்குகளுக்கும் அப்பால் ஈமான் கொண்ட விசுவாசிகளுக்காக அல்லாஹ் நிர்ணயித்து வைத்ததுதான் வாழ்க்கையின் இந்த மூன்றாவது பகுதி.

பிரிட்டனில் குறையும் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை!


பிரிட்டனில் குறையும் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை!

britain
லண்டன்:மதசார்பற்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் வேளையில் 2030-ஆம் ஆண்டிற்குள் பிரிட்டன் கிறிஸ்தவ நாடு என்ற பதவியை இழந்துவிடும் என்று ஆய்வறிக்கை கூறுகிறது.
கிறிஸ்தவ மதத்தில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ஐந்து லட்சம் பேர் வெளியேறுகின்றனர். அதேவேளையில் மதத்தை மறுப்பவர்கள், மதசார்பற்றவர்கள் ஆகியோரின் எண்ணிக்கை ஆண்டு தோறும் ஏழு லட்சத்திற்கும் அதிகமாக அதிகரித்து வருகிறது. இவ்வறிக்கையை டெய்லி மெயில் பத்திரிகை வெளியிட்டுள்ளது.
2030-ஆம் ஆண்டில் மதசார்பற்றவர்கள் கிறிஸ்தவர்களை விட அதிகமாக மாறுவார்கள் என்று லேபர் ஃபோர்ஸ் சர்வே கூறுகிறது.
அதேவேளையில் கிறிஸ்தவம் தளர்ச்சியை சந்தித்த போதும் முஸ்லிம்களும், ஹிந்துக்கள், புத்த மதத்தினர் ஆகியோரின் எண்ணிக்கை மிகச்சிறந்த வளர்ச்சியை அடைவதாக அந்த ஆய்வறிக்கை கூறுகிறது.

மோடிக்கு எதிராக அமெரிக்க இந்திய சமூகம்!


மோடிக்கு எதிராக அமெரிக்க இந்திய சமூகம்!

'We want Gandhi's Gujarat, not Modi's Gujarat'
வாஷிங்டன்:குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை நிகழ்ந்து 10-வது ஆண்டு நிறைவுறும் வேளையில் அமெரிக்காவில் வாழும் இந்திய சமூகத்தின் தலைமையில் நரேந்திர மோடியை எதிர்த்து கண்டன போராட்டம் நடைபெற்றது.
40-க்கும் மேற்பட்ட அமைப்புகளின் சார்பாக நடந்த போராட்டத்தில் மோடிக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன. நூற்றுக்கணக்கானோர் இப்போராட்டத்தில் கலந்துகொண்டனர்.
மன்ஹாட்டனில் காந்தி சிலைக்கு அருகே திரண்ட இந்தியர்கள் குஜராத் இனப்படுகொலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கவேண்டும் என்றும், குற்றவாளிகள் சட்டத்தின் முன்னால் நிறுத்தப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

பாலியல் அத்துமீறல்: புகார் அளித்த ஆசிரியை நீக்கம்!


பாலியல் அத்துமீறல்: புகார் அளித்த ஆசிரியை நீக்கம்!

அஹ்மதாபாத்:குஜராத் மாநிலம் காந்திநகரில் உள்ள நேசனல் இன்ஸ்ட்யூட் ஆஃப் டிசைன்(என்.ஐ.டி) வளாகத்தில் பாலியல் அத்துமீறல் குறித்து புகார் அளித்த ஆசிரியை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
38 வயதான தீபா சல்கா என்பவர் 2 வருட ஒப்பந்தத்தின் அடிப்படையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் இறுதியில் ஆசிரியையாக என்.ஐ.டியில் நியமிக்கப்பட்டார். இவரது நியமனம் தொடர்பாக வருடாந்திர மதிப்பீடு நடைபெறும் என்றும், வேலையில் திருப்தி இல்லாவிட்டால் ஒரு மாத நோட்டீஸ் வழங்கி பணியில் இருந்து நீக்கம் செய்யப்படுவார் என்றும் நியமன உத்தரவில் கூறப்பட்டிருந்தது.