Saturday, 19 November 2011

MADRAS ARABIC COLLEGE


madras arabic college
a unit of school of foreign LANGUAGAS (govt.regd)
SENCE2004

Complete Arabic course
learn arabic in chennai with in just 240 Hrs

class held FOR:
·       Afzalul Ulama (MU)
·       B.a(islamic studies) (MSu)
·       M.a(morden arabic) (MU)
·       diploma in arabic (mac)
·       spoken english
·       spoken urudu
·       diploma in journalism &mass communication (MIJM)
·       learn to recite Quran in just a singal day(mac)

Effective headed & trained by:
Afzalul Ulama Moulvi I.Jameel Basha Oumari
B.sc (biochem), M.B.A (HR), M.A, PGDFTM (IEM (cal), PGDECom, L.L.b

Admissions open now, for more details:
madras arabic college,
#, 135,2nd Floor Dr.Besent road, royapettah,
Chennai-14, Tamilnadu, India.
Contact as:
Mobile  : 9884439231/9841870710



குர்ஆனிய பாடம்: இறைநம்பிக்கையின் பலம்


faith
நம்மை படைத்த அல்லாஹ் நாம் சில விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்று கட்டளையிட்டுள்ளான். அதில் தலையாயது தான் அவன் மீது நாம் கொள்ள வேண்டிய நம்பிக்கை. அவனை மட்டுமே கடவுளாக ஏற்க வேண்டும் என்ற கட்டளை.
இஸ்லாத்தின் அடிப்படையாக இந்த இறைநம்பிக்கை உள்ளது. எதற்காக? இந்த இறை நம்பிக்கை ஒருவன் மனதிற்கு சென்றுவிட்டால் அவன் அளப்பறிய சக்தியை பெறுகிறான். அல்லாஹ்வை தவிர வேறு எவருக்கு அஞ்சாததால் அவனது வாழ்க்கையில் எவ்வித சலனமும் இல்லை. அல்லாஹ்வின் மீதான அச்சம் இருப்பதால் அவனை கொண்டு மற்றவர்களுக்கு தொந்தரவுகள் எதுவும் இல்லை. இதனை தான் வரலாறு நமக்கு சொல்லித் தருகிறது.
இன்று நாமும் இறைநம்பிக்கை கொண்டுள்ளோம். நம்மில் பலருக்கு இந்த இறைநம்பிக்கை என்னும் பரிசு மிகவும் எளிதாக கிடைத்தது என்பதை மறுப்பதற்கில்லை. எளிதாக கிடைத்ததால் தான் என்னவோ நாம் இதனை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை போலும்! இதனால்தான் நமக்கு பல படிப்பினைகளை அல்லாஹ் சொல்லித் தருகிறான். குர்ஆனிலும் சான்றோர்களின் வாழ்க்கையிலும் இதற்கான பல ஆதாரங்கள் உள்ளன. ஆனால் குர்ஆனின் ஒரு சம்பவம் இறை நம்பிக்கையின் பலம், எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை நமக்கு காட்டுகிறது.
நபி மூஸா(அலை) அவர்கள் இறைவனின் செய்தியை பெற்றுக் கொண்டு அதனை அப்போதைய அரசனாக இருந்த பிர்அவ்னிடம் கொண்டு செல்கிறார்கள். ஆட்சி அதிகாரத்தை மொத்தமாக வைத்து அனுபவித்து கொண்டிருப்பவனுக்கு அல்லாஹ் மட்டும்தான் கடவுள் என்பதை ஜீரனிக்க முடியவில்லை. ‘நீர் கொண்டு வந்திருக்கும் அத்தாட்சி எதையும் காட்டும்’ என்று முதலில் கேட்டான். மூஸா(அலை) தனது கைத்தடியை எறிந்தார். உடனே அது பெரிய பாம்பாகிவிட்டது. தனது கையை சட்டைப்பையில் இருந்து வெளியே எடுத்தார். அது பார்ப்பவர்களுக்கு வெண்மையாக இருந்தது. பிர்அவ்னின் மனது உண்மையை ஏற்க மறுத்தது. அவனது துதிபாடிகளும் ‘இவர் ஒரு திறமையான சூனியக்காரர்’ என்று கூறினர். ‘இவரை எவ்வாறு எதிர்கொள்வது?’ என்று தனது சகாக்களுடன் ஆலோசணை செய்தான். ‘நமது நாட்டின் திறமையான சூனியக்காரர்கள் அனைவருக்கும் அறிவிப்பு கொடு. அவர்கள் இவருடன் போட்டியிட்டும்’ என்று கூறினர் சகாக்கள்.
வந்த சூனியக்காரர்கள் போட்டி ஆரம்பம் ஆவதுற்கு முன் தெளிவாக ஒரு கேள்வியையும் கேட்டுக் கொண்டார்கள். ‘மூஸாவை வென்றுவிட்டால் அதற்குரிய வெகுமதி எங்களுக்கு கிடைக்குமல்லவா?’ என்று கேட்டார்கள். தங்கள் சூனியத்தின் மீது அவர்கள் கொண்ட நம்பிக்கை நிச்சயம் நாம் வெற்றி பெறுவோம் என்ற எண்ணத்தை அவர்களுக்கு கொடுத்தது. பிர்அவ்னும் வாக்குறுதியை கொடுத்தான். ‘நீங்கள் எனக்கு நெருக்கமானவர்களாகி விடுவீர்கள்’ என்றான். இதை விட வேறு என்ன வேண்டும்? ஆட்சியை கையில் வைத்திருப்பவனுக்கு நெருக்கமாகி விட்டால் விரும்பியது எல்லாம் கிடைக்குமே. அதிகாரத்தை பயன்படுத்தி நாமும் சிறிது ஆட்டம் போடலாமே.. இன்று அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு நெருக்கமாக உள்ளவர்கள் போடும் ஆட்டத்தை பார்த்தால் அந்த சூனியக்காரர்களின் நிலையை நாம் உணர்ந்து கொள்ளலாம்.
பிர்அவ்னின் வார்த்தைகள் கொடுத்த உற்சாகத்தில் போட்டியில் குதித்தனர். தங்களின் தடிகளை எறிந்து மக்களின் கண்களை மயக்கி மகத்தான சூனியத்தை செய்தனர். வெற்றியின் விளிம்பில் தாங்கள் இருப்பதாக அவர்கள் உணர்ந்த போது, அல்லாஹ் மூஸா(அலை) அவர்களை தடியை எறியுமாறு அறிவித்தான். எறிந்தவுடன் அது பெரிய பாம்பாகி அவர்களின் கற்பனைகள் அனைத்தையும் விழுங்கி விட்டது. சூனியக்கலையில் ஜாம்பவான்களாக இருந்தவர்களுக்கு இது பெரிய அதிர்ச்சியை கொடுத்தது. தங்களின் சூனியங்கள் வீணாகி விட்டதை உணர்ந்த அவர்கள் தங்கள் தோல்வியை ஒப்புக் கொண்டனர். தாங்கள் சிறுமைபடுத்தப்பட்டதையும் உணர்ந்தனர்.
தோல்வியை கண்டவர்கள் அத்துடன் நிற்கவில்லை. இத்தனை காலம் தாங்கள் செய்து வந்த சூனியங்கள் அனைத்தும் பொய்யானவை என்பதையும் உணர்ந்தனர். மூஸா என்ற சாதாரண மனிதரால் இதனை செய்திருக்க முடியாது. அவருக்கு மேலாக ஒருவன் இருக்கிறான் என்பதை அறிந்தார்கள். தங்களின் சக்திகளுக்கெல்லாம் மேலான சக்தி பெற்றவன் அல்லாஹ் மட்டும்தான் என்பதையும் அறிந்தனர். தங்களின் சூனியத்தின் மீது நம்பிக்கை கொண்ட பிர்அவ்னை விட அல்லாஹ்தான் உயர்ந்தவன் என்பதை உணர்ந்து கொண்டனர். உணர்ந்தவர்கள் உடனே உரக்க உரைத்தனர், ‘அகிலங்களின் இரட்சகனான அல்லாஹ் மீது நாங்கள் நம்பிக்கை கொண்டோம். அவனே மூஸாவுக்கும் ஹாரூனுக்கும் இறைவன் ஆவான்’ அதுவரை நிராகரிப்பின் பக்கம் இருந்தவர்கள், அல்லாஹ்வின் வல்லமையை கண்டவுடன் சரண் அடைந்தனர்.
தன்னுடைய அதிகாரத்தை காப்பாற்றுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட சூனியக்காரர்கள் மூஸாவின் பக்கம் சென்றதை பிர்அவ்ன் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. ‘நான் உங்களுக்கு அனுமதி அளிக்கும் முன்னரே நீங்கள் நம்பிக்கை கொண்டு விட்டீர்களா? இது மூஸாவுடன் சேர்ந்து நீங்கள் செய்த சூழ்ச்சி என்று கூறினான். எஞ்சியிருக்கும் மக்களையாவது தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்த பிர்அவ்ன் அராஜகத்தின் பக்கம் திரும்பினான். புதிதாக நம்பிக்கை கொண்ட அந்த மக்களை நோக்கி ‘உங்கள் அனைவரையும் மாறு கை மாறு கால் வாங்கி சிலுவையில் அறைவேன்’ என்று பயமுறுத்தினான். இப்போது தானே நம்பிக்கை கொண்டார்கள், சிறிது பயம் காட்டினால் மீண்டும் நம் பக்கம் திரும்பி விடுவார்கள் என்று நினைத்தான் போலும்.
ஆனால் அந்த மக்களோ மிகவும் உறுதியாக இருந்தார்கள். ‘நாங்கள் எங்கள் இரட்சகனின் பக்கமே திரும்ப செல்வோம். அவனது அத்தாட்சிகளை நாங்கள் நம்பிக்கை கொண்டதற்காக நீ எங்களை பழி வாங்குகிறாய்’ என்ற தெளிவாக கூறினார்கள். தங்களின் நம்பிக்கையில் தாங்கள் உறுதியாக இருக்க இறைவனிடம் ஒரு பிரார்த்தனையும் செய்தார்கள். ‘எங்கள் மீது பொறுமையை பொழிவாயாக, முஸ்லிம்களாக எங்களை கைப்பற்றி கொள்வாயாக’ என்று பிரார்த்தனை செய்தார்கள்.
மூஸாவை தோற்கடிக்க வேண்டும், பிர்அவ்னுக்கு நெருக்கமானவர்களாக ஆக வேண்டும் என்று விரும்பிய மக்கள், அல்லாஹ்வின் வல்லமையை புரிந்து அவனை நம்பிக்கை கொண்ட பிறகு அப்படியே மாறிவிட்டார்கள். பிர்அவ்னின் நெருக்கத்தை விட அல்லாஹ்வின் நெருக்கத்தை தேர்ந்தெடுத்தார்கள். பிர்அவ்னிடம் கொள்ளும் நெருக்கமானது சில காலம் மட்டுமே நிலைத்திருக்கும், ஆனால் அல்லாஹ்வின் நெருக்கம் என்றென்றும் நிலைத்திருக்கும் என்பதை உணர்ந்தார்கள்.
அல்லாஹ்வின் நம்பிக்கை மனதில் வந்த பிறகு வேறு எந்த சக்திக்கும் அவர்கள் அடிபணிபவர்களாக இல்லை. பிர்அவ்னின் குணத்தையும் அவனது கொடூரத்தையும் நேரடியாக கண்டவர்கள். அதிகார மமதையில் எதை வேண்டுமென்றாலும் செய்வான் என்பதையும் அறிந்தே வைத்திருந்தார்கள். அதுவரை அவன் முன் குனிந்து நின்றவர்கள், இறைநம்பிக்கை வந்தவுடன் அவனுக்கெதிராக உறுதியாக நின்றார்கள். தங்களின் நம்பிக்கையும் உறுதியும் தங்களின் உயிரை பறிக்கும் என்பதை அறிந்த பிறகும் அதற்கு அவர்கள் கவலைபடவில்லை.
பிர்அவ்ன் கொடுக்கும் தண்டனை சில நிமிடங்களிலோ அல்லது மாதங்களிலோ முடிந்து விடும். ஆனால் பிர்அவ்னுக்கு கட்டுப்பட்டால் நிலையான மறுமையில் நிரந்தரமான வேதனையை அனுபவிக்க வேண்டுமே என்ற பயம் அவர்கள் மனதில் இருந்தது. நிலையற்ற உலகத்தை விட நிலையான மறுமையை தேர்ந்தெடுத்தார்கள். எவ்வளவுதான் உறுதியாக இருந்தாலும் அல்லாஹ்வின் உதவியின்றி எதையும் செய்ய முடியாது. எனவேதான் தங்களுக்கு உறுதியை வழங்குமாறு பிரார்த்தனையும் செய்தார்கள்.
இதுதான் சூனியக்காரர்களாக வந்து இறை நம்பிக்கையாளர்களாக மாறியவர்களின் சம்பவம். இறைநம்பிக்கை மனதிற்கு சென்றால் என்னவெல்லாம் செய்யும் என்பதை இவர்களின் வாழ்க்கை நமக்கு சொல்லித் தருகிறது. நமது இறை நம்பிக்கையை சற்று உரசிப் பார்ப்போமா?

எடியூரப்பா மீது மேலும் ஒரு புகார்

ஜம்மு-கஷ்மீர்:விசாரணை இன்றி சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிறுவர், சிறுமியர்



Children languishing in jail without trial, and girl
புதுடெல்லி:ஜம்மு-கஷ்மீரில் ஜுவைனல்(சிறுவர் சீர்திருத்த) நீதிமன்றங்கள் விசாரணை இன்றி சிறுவர்களை காவலில் வைப்பதாக மனித உரிமை அமைப்பான ஏசியன் செண்டர் ஃபார் ஹியூமன் ரைட்ஸின் உண்மை கண்டறியும் அறிக்கை கூறுகிறது.
ஜம்மு கஷ்மீரில் ஜுவைனல் அமைப்பு சீர்குலைந்துள்ளதாக கூறும் அறிக்கையை தொடர்ந்து ஸ்ரீநகர், புத்காம், ஷோபியான், புல்வாமா, இஸ்லாமாபாத், குல்காம், கந்தேர்பல், ஜம்மு ஆகிய மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆய்வு நடத்திய பிறகு மனித உரிமை அமைப்பு அறிக்கையை தயார் செய்தது.
சிறுமிகளை அடைப்பதற்கு போதிய இடவசதி சிறுவர் சீர்திருத்த பள்ளிகளில்  இல்லாததால் அவர்களை போலீஸ் லாக்-அப்புகள் மற்றும் சிறைகளுக்கு அனுப்புவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஆர்.எஸ் புராவில் விசாரணை இல்லாமல் சிறுவர்கள் சிறார் சீர்திருத்த பள்ளிகளில் தங்கவைக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் செப்டம்பர் மாதம் வரை ஜம்மு-கஷ்மீரில் நடந்த போராட்டத்தின் போது பொது பாதுகாப்பு சட்டத்தின் போர்வையில் கைதுச் செய்யப்பட்ட சிறுவர்களை வயதுக்கு வந்த நபர்களுடன் லாக்-அப்புகளிலும், சிறையிலும் அடைத்து சாதாரண நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தி விசாரணை செய்துள்ளதாக மனித உரிமை அமைப்பின் அறிக்கை கூறுகிறது.
ஜம்மு-கஷ்மீரில் சிறுவர்-சிறுமிகளுக்கு நீதி மறுக்கப்படுவதாகவும், ஜுவைனல் ஜஸ்டிஸ் சட்டம் 1997 ஆம் ஆண்டு அடிப்படையிலான உரிமைகள் மறுக்கப்படுகிறது என அவ்வறிக்கை கூறுகிறது.

நந்திகிராம்:கொல்லப்பட்டவர்களின் உடல்களை ஆற்றில் வீசுவதற்கு கொண்டுசென்ற டிரைவர் கைது



imagesCADWRFIE
தம்லுக்:கடந்த 2007-ஆம் ஆண்டு நந்திகிராமை கைப்பற்ற சி.பி.எம் குண்டர்களால் சுட்டுக் கொலைச் செய்யப்பட்டவர்களின் உடல்களை ஆற்றில் வீச சென்ற ஆம்புலன்ஸ் டிரைவரை சி.ஐ.டி போலீஸார் கைதுச் செய்துள்ளனர். ஆம்புலன்ஸும் கைப்பற்றப்பட்டுள்ளது. சக்திபடா தளபதி என்பவர்தாம் கைதுச் செய்யப்பட்ட டிரைவர் ஆவார்.
கிழக்கு மிட்னாப்பூர் மாவட்டத்தில் கைஜூரியில் வைத்து இவரை கைது செய்ததாக சி.ஐ.டி போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார். ஏழு உடல்களை இவர் ஆற்றில் வீசியுள்ளார். திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு போராட்டக்காரர்களிடமிருந்து நந்திகிராமை கைப்பற்ற 2007-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்(சி.பி.எம்) கட்சியினர் தாக்குதலை கட்டவிழ்த்துவிட்டனர்.
மருத்துவமனையிலிருந்து இறந்த உடல்களை எடுத்துக்கொண்டு தளபதி ஆற்றில் வீச சென்றதாக அதிகாரிகள் கூறுகின்றனர். நந்திகிராமில் கொலைச் செய்யப்பட்டவர்களில் 9 பேரின் உடல்கள் காணாமல் போயின. இதில் இரண்டு பேரின் உடல்கள் பின்னர் தோண்டி எடுக்கப்பட்டது. இறந்த உடல்களை கொண்டு சென்ற ஆம்புலன்ஸ் சி.பி.எம் கட்சியின் உறுப்பினரால் நடத்தப்படும் அரசு சாரா அமைப்பிற்கு சொந்தமானது. தளபதியை ஹால்தியா நீதிமன்றம் நான்கு தினங்கள் சி.ஐ.டி காவலில் வைக்க உத்தரவிட்டது.

இஷ்ரத் வழக்கு:எஸ்.ஐ.டி இறுதி அறிக்கையை சமர்ப்பித்தது


குல்பர்க் சொஸைட்டி கூட்டுப்படுகொலை: விசாரணையை இடைக்கால தடை கோரிய மனு தள்ளுபடி




imagesCAFV102Y
அஹ்மதாபாத்:குல்பர்க் சொஸைட்டி கூட்டுப் படுகொலை வழக்கின் விசாரணையை இடைக்கால தடை கோரி கொலைச் செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் தாக்கல் செய்த மனுவை சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடிச் செய்துள்ளது. வழக்கை விசாரிக்கும் சிறப்பு புலனாய்வு குழு நீதிமன்றத்தில் இறுதி அறிக்கையை சமர்ப்பிக்கும் வரை விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்கவேண்டும் என மனுதாரர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இவ்வழக்கில் தீர்ப்பு அளிக்கக்கூடாது என்பது மட்டுமே உச்சநீதிமன்றத்தின் உத்தரவு எனவும், அதேவேளையில் விசாரணையை நிறுத்திவைக்க உத்தரவிடவில்லை என நீதிபதி பி.ஜெ.தாந்தா மனுவை தள்ளுபடிச் செய்யும் போது தெரிவித்தார். உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி காலம் தாழ்த்தாமல் நீதிமன்றத்தில் இறுதி அறிக்கையை சமர்ப்பிப்பதாக எஸ்.ஐ.டி அறிவித்துள்ளதாக நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. அறிக்கையை தாக்கல் செய்வோம் என எஸ்.ஐ.டி அளித்துள்ள உறுதியை புறக்கணித்து விசாரணைக்கு தடை விதிப்பது சரியல்ல என நீதிமன்றம் கூறியது.
உயர்நீதிமன்றத்தை அணுகுவதற்காக விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்கவேண்டும் என கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினருக்காக ஆஜரான வழக்கறிஞர் எஸ்.எம்.வோரா வாதிட்டார். இக்கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் மறு ஆய்வு மனுவை தாக்கல் செய்யவேண்டும் எனவும், பின்னர் உயர்நீதிமன்றத்தை அணுகலாம் எனவும் உத்தரவிட்டது.
வழக்கு தொடர்பான ஆவணங்கள் இதுவரை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படாததால் விசாரணை ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டதன் அடிப்படையில் நடைபெறலாம் என வோரா வாதிட்டார்.
இஹ்ஸான் ஜாஃப்ரியின் மனைவி ஸாக்கியா ஜாஃப்ரி அளித்த மனுவில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் படி சிறப்பு புலனாய்வு குழுவின் விசாரணையில் கண்டுபிடித்தவற்றை சிறப்பு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டுமென வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார். சில முக்கிய அரசியல்வாதிகள் மற்றும் போலீஸ் அதிகாரிகளை காப்பாற்றுவதற்காகவே எஸ்.ஐ.டி இதுவரை நீதிமன்றத்தில் அறிக்கையை சமர்ப்பிக்கவில்லை என அவர் குற்றம் சாட்டினார். இடைக்கால தடைக்கோரிய மனு நீதிமன்ற நடவடிக்கைகளை தாமதப்படுத்துவதற்கு ஆகும் என எஸ்.ஐ.டி நீதிமன்றத்தில் தெரிவித்தது.
2002-ஆம் ஆண்டு பிப்ரவரி 28-ஆம் தேதி முன்னாள் காங்கிரஸ் எம்.பியான இஹ்ஸான் ஜாஃப்ரி மற்றும் அவரது வீட்டில் அடைக்கலம் புகுந்த 69 நபர்களையும் ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் கொடூரமாக எரித்துக் கொலைச்செய்த வழக்குதான் குல்பர்க் சொஸைட்டி கூட்டுப்படுகொலை வழக்காகும்.

Thursday, 10 November 2011

ரஷ்யா:ஸயீத் நூர்ஸியின் நூல்களை வாசித்ததற்கு சிறைத்தண்டனை


10 Nov 2011 மாஸ்கோ:துருக்கியை சார்ந்த பிரபல இஸ்லாமிய மார்க்க அறிஞர் பதியுஸ்ஸமான் ஸய்யித் நூர்ஸியின் பிரபல திருக்குர்ஆன் விரிவுரையான ரிஸாலே நூர் வாசித்ததற்கும், அதனை பாதுகாத்ததற்கும் ரஷ்யாவில் ஒரு நீதிமன்றம் ஆறு முஸ்லிம்களுக்கு சிறைத்தண்டனை வழங்கியுள்ளது.

நூர்ஸியின் ரஷ்ய மொழியிலான நூல்கள் தீவிரவாத செயல்களை தூண்டுகிறது என குற்றம் சாட்டி ரஷ்ய நீதிமன்றங்கள் தடை விதித்துள்ளன. நிஷ்னி நோவகரோத் நீதிமன்றம் ஆறுபேருக்கு தண்டனை வழங்கியது. அவர்கள் நூர்ஸியின் கொள்கைகளை பிரச்சாரம் செய்யும் குழுவில் உறுப்பினர்கள் என நீதிமன்றம் குற்றம் சாட்டியது.
ரஷ்யாவில் பல இடங்களிலும் அமைதியான முறையில் இஸ்லாமிய மார்க்க பணிகளை நடத்துவதை தடுக்க நீதிமன்றங்கள் இத்தகைய முயற்சிகளை மேற்கொண்டுள்ளன.

தாடி வைத்திருந்ததால் காஷ்மீரி மாணவரிடம் ஆறுமணி நீரம் விசாரணை 

 

போபால்:காஷ்மீரி மாணவர் ஒருவர் தாடி வைத்திருந்த காரணத்தால் பல்கலைகழக ஹாஸ்டலில் சக மாணவர்களால் வேதனை செய்யப்பட்டதுடன் திருட்டு மற்றும் தீவிரவாதம் என்ற பெயரில் ஆறு மணி நேரம் விசாரணை செய்யப்பட்டுள்ளார்.
குர்ஷீத் அஹ்மத் வணி என்ற கஷ்மீரைச் சேர்ந்த மாணவர் போபால் பர்கதுல்ல பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்.சி முதலாம் ஆண்டு பயின்று வருகிறார். அவர் தாடி வைத்திருந்ததின் காரணமாக அவருடன் படிக்கும் சக மாணவர்கள் பல்கலைக்கழக விடுதியில் தொடர்ந்து கேலி செய்து அவரை துன்புரித்தியுள்ளனர். எனவே குர்ஷீத் விடுதியில் தங்க மனம் இல்லாமல் விடுதியை காலி செய்துவிட்டு வெளியில் சென்றுள்ளார்.
விடுதியில் கட்டியிருந்த பணத்தை திரும்ப பெறுவதற்காக அவர் காசோலையுடன் தொடர்ந்து மூன்றாவது முறையாக வங்கி சென்றுள்ளார். சென்ற மாதம் ஆந்திர வங்கியில் திருட்டு நடந்துள்ளமையால் போலீசாரால் வரையப்பட்டிருந்த படமும் இவரது தாடியும் ஒரே மாதிரியாக இருக்கிறது என்று வங்கியின் காவலாளி போலீஸிற்க்கு தகவல் கொடுத்துள்ளார்.
எனவே போலீஸ் அவரை பக் செவனியா காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று ஆறு மணி நேரம் துருவி துருவி விசாரித்துள்ளனர். குர்ஷீத் துன்புறுத்தப் பட்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இதுப் பற்றி காவல்துறை அதிகாரி எ.பி.சிங் கூறுகையில் சந்தேகப்படும் படி குர்ஷீத் இருந்ததால் விசாரணை செய்தோம் பிறகு அவர் அப்பாவி என்று தெரிந்ததால் விடுதலை செய்து விட்டோம் என்று கூறியுள்ளார். மேலும் குர்ஷீத் துன்புறுத்தப் பட்டாரா என்று கேட்டதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
போலீஸ் ஆறு மணி நேரம் விசாரித்ததில் குர்ஷீத் கடுமையான பயத்தில் உள்ளார். மேலும் தன்னை சக மாணவர்கள் தாடி வைத்திருப்பதற்காக கேலி செய்வதால் தான் விடுதியில் தங்க விரும்பவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
 

ஆசியா முழுவதும் உளவுத் துறையை பரப்பி வருகிறது இஸ்ரேல் 

mostofi20111107193557920 

தெஹ்ரான்: இஸ்ரேலிய உளவு அமைப்பான மொசாத் அதன் செயல்பாட்டு மற்றும் உளவு மையங்களை பல ஆசிய நாடுகளில் பரப்பி வருவதாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையானது இஸ்ரேலில் உள்ள டெல் அவிவின் நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து கிடைக்கப் பெற்றது எனவும், ஈரானின் தொடர் தாக்குதலுக்கு பழி வாங்கும் வண்ணமாகவும், மேலும் ஈரான் இஸ்ரேலின் சியோனிச கட்சியின் சில பயங்கரவாதிகளை கைது செய்த பின்னருமே  இந்த முடிவு மேற்க் கொள்ளப்பட்டதாக பார் எனும் ஊடகம் தெரிவித்துள்ளது.
இதனை நிருபிக்கும் வண்ணாமாக கடந்த ஜனவரி மாதம் 2010- ஆம் ஆண்டு தெஹ்ரான் பல்கலைகழகத்தில் விரிவுரையாளராக பணியாற்றிய மசௌத் அலி முஹம்மதி என்பவரை அவரது சொந்த ஊரான வடக்கு தெஹ்ரானில் வைத்து அலி ஜமாலி பாசி என்பவர் கொலை செய்த வழக்கில், ஈரான் நீதிமன்றத்தில் அலி ஜமாலி ஆஜர் படுத்தப்பட்ட போது, இவர் பல முறை துருக்கி சென்று மொசாத் உளவு துறையை சந்தித்தது வெட்ட வெளிச்சமாக தெரிய வந்துள்ளது.
இதனால் இஸ்ரேல், அஜர்பைஜான், துர்க்மெனிஸ்தான் மற்றும் ஜார்ஜியாவில் உள்ள தனது உளவு துறையை மாற்றியமைக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. மேலும் துர்க்மெனிஸ்தானில் உள்ள இஸ்ரேலிய தூதரகம் அமெரிக்காவின் வற்புறுத்தலால் திறக்கப்பட்டது எனவும், அதனை இஸ்ரேல் டெல் அவிவின் உளவு துறை மையமாக பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கிறது.
இஸ்ரேல் உளவு துறையின் உண்மை முகத்தை அறியாத தாய்லாந்து, இந்தியா, அர்மேனியா மற்றும் மலேசியாவின் அரசாங்கங்களே இஸ்ரேலின் உளவு துறையை வலுவூட்ட காரணமாக அமைந்து வருகிறது. மேலும் இந்த உளவு மையமானது ஈரானில் மட்டுமல்லாது சிரியா, ஈராக், சவூதி அரேபியா, எகிப்து மற்றும் துனிசியாவிலும் டெல் அவிவ் தங்களது குறியை வைத்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
மேலும் இதற்கு நிபுணர்கள் தெரிவிக்கும் கருத்து, மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்ரிக்காவில் ஏற்பட்ட இஸ்லாமிய விழிப்புணர்வு மற்றும் மறு சீரமைப்பே இதற்கு பின்னால் உள்ள காரணம் என்று தெரிவித்துள்ளனர்.

இஸ்ரேல் குண்டுவீச்சில் இரண்டு ஃபலஸ்தீனர்கள் படுகொலை 

pa2