Friday, 27 July 2012

றமழானைப் பயன்படுத்துதல் சில ஆலோசனைகள்


ramadhanநன்மையையும் நற்செயல்களையும் நோக்கிய எட்டுக்களின் ஆரம்பப் புள்ளியாக இவ் உபதேசம் அமையும் என்ற நம்பிக்கையுடன் ஆரம்பிக்கின்றேன்.
நாம் எதிர்பார்ப்புகளுடன் காத்திருக்கும் றமழான் எங்களிடம் வரும்போது அதற்கான தயார் நிலைகள் எம்மிடம் இருக்க வேண்டும். எம்மிடம் பிரதானமாக இரண்டு தயார் நிலைகள் இருக்க வேண்டும்.
1. மனோ நிலை மற்றும் செயல் ரீதியான தயார் நிலை:
நாம் றமழானை அடைந்து கொள்ள இப்போதிலிருந்தே அதிகமாக பிரார்த்தனைகளில் ஈடுபட வேண்டும்.
ரமழானுக்கு முன்னால் எமக்குள் தோன்ற வேண்டிய எண்ணங்கள்:
எமது உள்ளத்தில் எப்போதும் நன்மை செய்ய வேண்டும் என்ற தீராத ஆசை இருக்க வேண்டும்.
"எனது அடியான் ஒரு நன்மையைச் செய்வதாகப் பேசினால் அவனுக்கு அதனை ஒரு நன்மையாக எழுதுகிறேன்" எனும் ஹதீஸுல் குத்ஸி ஸஹீஹ் முஸ்லிமில் இடம்பெறுகிறது. இதனை அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

Friday, 13 July 2012

மிஸ்டுகால்- தவறிய அழைப்புகளில் தடம் புரளும் வாழ்க்கை!



Missed call.
மிஸ்டு கால்(Missed Call) – இது ஒரு அழையா விருந்தாளி. மீனைப் பிடிக்க தூண்டில் போட்டு காத்திருப்பவர் போலவே சிலர் மிஸ்டு கால்கள் மூலம் வலை வீசுகின்றனர். வலையில் சிக்குவதை கண்டு எங்கோ ஓரிடத்தில் மிஸ்டுகால்களை தொடுத்த சூத்திரதாரி மறைந்திருந்து ரசிக்க துவங்குகிறான்.
உலகமெங்கும் விரிக்கப்பட்டுள்ள மிஸ்டு கால் என்ற வலையில் சிக்குபவர்கள் இளம் பெண்களும், திருமணமான பெண்களுமாவர். மிஸ்டுகால்களை தொடுக்கும் பாலியல் வக்கிரப் புத்திக் கொண்டோரின் அம்புகளால் தாக்கப்படுபவர்களில் வளைகுடாவாசிகளின் மனைவிகளும் அடங்குவர் என அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன.
மிஸ்டு கால் மூலமாக காதல் வலையில் சிக்குபவர்களிடையே பொருத்தங்கள் எதுவும் தேவை இல்லை. நிறம், அழகு, சாதி, குலம், குடும்பம், கல்வி, குணம், கலாச்சாரம், செல்வம் போன்ற எல்லைகள் எதுவும்  இல்லை. இங்குள்ள ஒரே தகுதி குரல் மட்டுமே. அக்குரலில் காதல் தழும்புகிறதா? எனில் பூவின் மீது வண்ணத்துப் பூச்சிக்கு ஏற்படும் ஈர்ப்பு போலவே மோகமும் பற்றிக்கொள்ளும். பூவிற்கும், வண்ணத்துப் பூச்சிக்கும் இடையே ஏற்படும் ஈர்ப்பின் ஆயுளே மிஸ்டுகால் மூலமாக உருவாகும் காதலுக்கும் பொருந்துவதால் வாழ்க்கை தடம்புரண்டு போய்விடுகிறது.
மிஸ்டுகால் மூலம் போடப்படும் தூண்டில்
ஆர்குட்,  ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் புகைப்படங்களை போஸ்ட் பதிவது, தகவல்கள், போன் நம்பர்கள் போன்றவற்றைத் தருவதும் மிஸ்டு கால்களுக்கு தூண்டுகோலாக அமைந்துவிடுகிறது. அந்த படங்களை பார்த்து, எண்ணைப் பார்த்து மிஸ்டு கால் பிரச்சினை உருவாகலாம்.
ஒரு வரியில் சொல்ல வேண்டுமென்றால் தெரியாத, எண்களில் இருந்து வரும் மிஸ்டு கால், எஸ்.எம்.எஸ் போன்றவற்றை நிராகரித்து விட்டால் தேவையற்ற சிக்கல்கள் தவிர்க்கப்பட்டு விடும்….!!!
ஆனால் என்ன செய்ய! பாழாய் போன மனம் வசீகரிக்கும் குரலில் வலுவிழந்து விடுகிறதே.
யாரோ அழைத்திருக்கிரார்களே…. முக்கியமான சமாச்சாரமோ என திரும்ப அழைத்தால் போச்சு! சிலர் வீட்டில் இருக்கும் ஆண்களிடம் கொடுத்து பேசச் சொன்னால் அத்துடன் பிரச்சனை முடிந்துவிடலாம். ஆனால், தனிமையில் இருக்கும் பெண்களிடம் தொடர்ந்து வரும் கால்கள் தடுமாற்றத்தை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது.
கடிதங்கள் மூலமாகவும், பார்வை மூலமாகவும் பெண்களை வீழ்த்திய காலம் மாறிப்போய் மிஸ்டு கால்கள் மூலமாக பெண்களை வெகு விரைவாக எவ்வாறு தங்கள் வலையில் சிக்கவைக்கின்றார்கள் என்பது குறித்து ஆராயும் பொழுது விஞ்ஞானப்பூர்வமாக சில உண்மைகள் புலப்படுகின்றன.
1.வசீகரிக்கும் குரல் காதலுக்கு முக்கிய காரணியாக மாறும்பொழுது ஐம்புலன்களும் அதில் ஒன்றி விடுகின்றன.
2.கடிதத்திற்கோ, மின்னஞ்சலுக்கோ இல்லாத ஈர்ப்பு கேள்விப் புலனுக்கு உண்டு.
3.தன்னை ஒருவர் விரும்புகிறார் என்பதை கேட்பது அனைவருக்கும் விருப்பமான ஒன்றுதான். இது ஒரு மனிதனுக்கு இயற்கையிலேயே உள்ள பலகீனமாகும்.
4.காதலுடன் வாழ்வில் குறுக்கிடும் நபர் வாழ்க்கையின் வெற்றிடத்தை நிரப்புவார் என்றதொரு கற்பனையை தாமாகவே வளர்த்துக்கொள்ளுதல்
அழையா விருந்தாளியின் மனசு!
மிஸ்டுகால் உறவுகளை ஆராயும்பொழுது நமக்கு புலப்படுவது என்னவெனில் மிஸ்டுகால்களை தொடுக்கும் நபரின் எண்ணமாகும். தனது இச்சையை தணித்துக்கொள்ளவும், சொந்த ஆதாயங்களையும் லட்சியமாக கொண்டே ஒருவன் மிஸ்டுகால் என்ற அம்பை எய்துவிடுகிறான்.
அழையா விருந்தாளியாக வீட்டின் வாசலை தட்டும் பொழுது அவனை வரவேற்க வேண்டுமா? புறக்கணிக்க வேண்டுமா? என்ற முடிவை எடுக்கும் சுதந்திரம் வீட்டுக்காரனுக்கு உண்டு. எவ்வித அறிமுகமும் இல்லாமல் வீட்டுக் கதவை தட்டுபவனை வரவேற்பதால் வீட்டுக்காரருக்கு எவ்வித பலனும் ஏற்படப் போவதில்லை. எவரேனும் இவ்வாறு அழையா விருந்தாளியாக வீட்டிற்குள் நுழைந்தால் அதில் 99 சதவீதமும் தவறான நோக்கமே அடங்கியிருக்கும்.
இதனைப் புரிந்துகொள்ளாமல் படித்த, அனுபவம் வாய்ந்த பெண்கள் கூட முன்னும் பின்னும் யோசிக்காமல் மிஸ்டுகால்களின் வலையில் சிக்கி விடுவதை நாம் காண்கிறோம்.

சோசியல் மீடியாக்களில் முஸ்லிம் விரோத கருத்துக்களை தடுக்கவேண்டும் – முலாயம்சிங்!


Mulayam Singh Yadav to talk to PM about 'anti-Islam' content on Facebook
லக்னோ:சோசியல் மீடியாக்களில் கார்ட்டூன்கள் மற்றும் கமெண்டிகள் மூலமாக இஸ்லாத்திற்கு எதிரான கருத்துக்கள் பரப்புரைச் செய்யப்படுவதை தடுத்து நிறுத்தவேண்டும் என்று சமாஜ்வாதி கட்சி தலைவர் முலாயம்சிங் யாதவ் கோரிக்கை விடுத்துள்ளார். இவ்விவகாரத்தில் பிரதமர் தலையிட கோரிக்கை விடுக்கவிருப்பதாகவும் முலாயம் சிங் தெரிவித்தார்.
சோசியல் மீடியாக்களில் இத்தகைய செயல்பாடுகள் வகுப்புவாதம் மற்றும் பிரிவினைவாதத்திற்கு காரணமாகும். நாட்டின் அமைதியை இது கெடுத்துவிடும் என்று சமாஜ்வாதிக் கட்சியின் அதிகாரப்பூர்வ செய்தித்தொடர்பாளர் ரஜேந்திர சவுதரி தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியது: கருத்து சுதந்திரத்தின் பெயரால் இத்தகைய பிரச்சாரங்களை கண்டு வாய்மூடி இருந்தால் நமது நாட்டின் சமூக நல்லிணக்க சூழல் கெட்டுவிடும். இவ்விவகாரம் தொடர்பாக பிரதமருடன் விவாதித்து, ஃபேஸ்புக் உள்ளிட்ட சோசியல் மீடியாக்களை கட்டுப்படுத்துவதுக் குறித்து பேசுவோம் என ராஜேந்திர சவுத்ரி தெரிவித்தார்.

முஸ்லிம் கைதிகளிடம் பாரபட்சம்: விசாரணை நடத்த பிரதமர் உத்தரவு!



Manmohan tells Maha govt, HM to examine police bias against Muslims
புதுடெல்லி:மஹராஷ்ட்ரா சிறைகளில் முஸ்லிம் கைதிகளிடம் போலீஸ் பாரபட்சமாக நடந்துகொள்வது குறித்து எழுந்துள்ள குற்றச்சாட்டைக் குறித்து விசாரணை நடத்த மஹராஷ்ட்ரா மாநில அரசுக்கும், உள்துறை அமைச்சருக்கும் பிரதமர் மன்மோகன்சிங் உத்தரவிட்டுள்ளார். இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தனது பத்திரிகைச் செய்தியில் இத்தகவலை வெளியிட்டுள்ளது.
அண்மையில் டாட்டா இன்ஸ்ட்யூட் ஆஃப் சோசியல் சயன்ஸ் நடத்திய ஆய்வில் மஹராஷ்ட்ரா மாநிலத்தில் முஸ்லிம் கைதிகள் பாரபட்சமாக நடத்தப்படுகின்றார்கள் என கண்டறியப்பட்டது. இதன் அடிப்படையில் இவ்விவகாரத்தில் பிரதமர் தலையிடவேண்டும் என முஸ்லிம் லீக் தலைவரும், மத்திய அமைச்சருமான இ.அஹ்மத் கோரிக்கை விடுத்திருந்தார்.

Wednesday, 6 June 2012

புகையிலை எதிர்ப்பு தினம்!


இன்று புகையிலை எதிர்ப்பு தினம்!


World No Tobacco Day
இரண்டு நூற்றாண்டுகளாக உலகம் ஓர் மாபெரும் ஆபத்திற்கு எதிராக போராட்டத்தை நடத்தி வருகிறது. நாடு, மொழி, இன, மத பாகுபாடின்றி அனைவரையும் வாட்டும் மிகப் பெரியதொரு பிரச்சனை. ஒவ்வொரு 6 விநாடிகளில் உலகில் ஒருவரின் உயிரை பறித்துக்கொள்ளும் அளவுக்கு மிகக்கொடியது. தொற்று நோய் அல்லாத இதர நோய்களில் முதலிடத்தை வகிக்கும் இந்த வில்லனை ‘புகையிலை’ என அழைக்கலாம்.
புற்றுநோய்,இதய நோய் உள்ளிட்ட நோய்களின் பேக்கேஜ்களை மனிதர்களில் உருவாக்க எளிதான வழியாக புகையிலை மாறியுள்ளது. உலகில் எவருக்கும் இதில் மாற்றுக் கருத்தே கிடையாது. ஆனால், அதன் விபரீதங்களை உட்கொள்ளவோ, புகையிலையை ஏன் ஒழிக்கவேண்டும் என்பதன் முக்கியத்துவத்தை உணரவோ மனித சமூகத்தில் பெரும்பாலோர் தயாரில்லை என்பதனை உணர்ந்து ஏற்பட்ட கவலையின் காரணமாக கடந்த 1987-ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 31-ஆம் தேதி உலக புகையிலை எதிர்ப்பு தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
“புகையிலையால் ஏற்படும் ஆபத்தையும், அவற்றிலிருந்து விடுபடும் வழிகளையும் எடுத்துரைப்பதே”இத்தினத்தின் நோக்கம்.

Friday, 11 May 2012

சிரியா மீது அவதானத்தை செலுத்த வேண்டும், இல்லாவிட்டால் சிவில் யுத்தம் உருவாகுவதைத் தடுக்க முடியாது


Mideast-Syriaசிரியாவில் முன்னெடுக்கப்படும் அமைதி செயற்பாடு அங்கு சிவில் யுத்தத்தை தவிர்க்கும் கடைசி முயற்சி என ஐ. நா. மற்றும் அரபு லீக் விசேட தூதுவர் கொபி அனான் பாதுகாப்புச் சபைக்கு விளக்கமளித்துள்ளார்.
பாதுகாப்புச் சபையின் நிறைவு கூட்டத் தொடரின் போது சுவிட்சர்லாந்து தலைநகர் ஜெனீவாவில் இருந்து கொபி அனான் சிரியா விவகாரம் குறித்து விளக்கமளித்தார். அதில் சிரியாவில் தொடர்ந்தும் வன்முறைகள் இடம்பெறுவதாக அனான் குறிப்பிட்டார். எனினும் சிரிய இராணுவம் தற்போது கனரக ஆயுதங்களை பயன்படுத்துவதை குறைத்திருப்பதாக அவர் கூறினார்.

சிரியாவில் நிவாரண நடவடிக்கைகளுக்கு மேலதிகமாக 27 மில்லியன் டொலர்களை செஞ்சிலுவை சங்கம் கோரியுள்ள நிலையிலேயே அனானின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. சிரியாவில் இயங்கும் ஒரே சர்வதேச தொண்டு நிறுவனமான செஞ்சிலுவை சங்கம்சிரியாவில் தொடர்ந்தும் ஆயிரக்கணக்கானோர் மனிதாபிமான உதவிகளை வேண்டிநிற்பதாக அறிவித்துள்ளது.

இதில் சிரியாவில் தீவிரமடைந்திருக்கும் துன்புறுத்தல்கள்கைதி நடவடிக்கைகள் மற்றும் ஏனைய வன்முறைகள் தொடர்பில் கவனத்திற்கு கொண்டுவந்திருப்பதாக கொபி அனான் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் சிரியாவில் இராணுவ செயற்பாடுகளை நிறுத்துவது ஜனாதிபதி பஷர் அல் அஸதின் கையில்தான் இருக்கிறது என்று பாதுகாப்புச் சபையை அறிவுறுத்தினார்.

கடந்த மூன்றரை ஆண்டுகளில் 16 கருணை மனுக்களில் முடிவு!


ப.சிதம்பரம்

புதுடெல்லி:கடந்த மூன்றரை ஆண்டுகளில் 16 கருணை மனுக்கள் மீது முடிவெடுக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் மாநிலங்களவையில் நேற்று(புதன்கிழமை) தெரிவித்தார்.

மாநிலங்களவையில் இதுக்குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில் ப.சிதம்பரம் கூறியது: உலகம் முழுவதும் மரண தண்டனை தொடர்பாக 2 விதமான கருத்துகள் உள்ளன. ஒன்று, மரண தண்டனையை ஒழிப்பது. மற்றொன்று குறிப்பிட்ட சில வழக்குகளுக்கு மட்டும் மரண தண்டனையை ஏற்பது. இந்தியச் சட்டம் அரிதினும் அரிதாக மரண தண்டனையை பரிந்துரைக்கிறது.
மரண தண்டனையை ஒழிப்பதற்கு சட்ட ஆணையம் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. எனவே, மரண தண்டனை குறித்து மத்திய அரசு எந்த முடிவையும் எடுக்கவில்லை.
எனவே, இப்போதைக்கு மரண தண்டனை பற்றி எந்த மறு ஆய்வும் இல்லை. ஆனால், மறு ஆய்வுக்கான காலம் வரும். குடியரசுத் தலைவரால் மரண தண்டனையைக் குறைக்க முடியும். மொத்தம் 16 கருணை மனுக்கள் மீது குடியரசுத் தலைவர் முடிவெடுத்துள்ளார். அவரது முடிவு குறித்து நான் எனது கருத்தைக் கூற முடியாது.

மாவீரன் திப்புசுல்தான் நினைவு நாள்


மாவீரன் திப்புசுல்தான்

இன்று மாவீரன் திப்பு சுல்தான் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கெதிராக தனது இன்னுயிரை தியாகம் செய்த நாள்.

1799 ஆம் மே மாதம் நான்காம் தேதி சாதாரண சிப்பாய் போல் ஆங்கிலேய அந்நிய படைக்கெதிராக களமிறங்கி தனது உடலில் கடைசி மூச்சு நிற்கும் வரை உறுதியுடன் போராடி உயிர் தியாகியானார் மாவீரன் திப்பு. அந்த வீரத் திருமகனின் வரலாற்றை நினைவுக்கூறுவது இந்திய தேசத்தின் விடுதலை வரலாற்றையே நினைவுக்கூறுவதற்கு சமமாகும்.
“ஆடுகளைப் போல 200 ஆண்டுகள் வாழ்ந்து பிழைப்பதை விடப் புலியைப் போல 2 நாட்கள் வாழ்ந்து மடியலாம்”
எதிரிகளுடன் தீரமுடன் போரிட்டு குண்டு காயங்களுடன் கோட்டை வாயிலில் சரிந்து கிடந்த திப்புவிடம் அவரது பணியாள், “அரசே! யாரேனும் ஒரு ஆங்கிலேயே அதிகாரியை அழைக்கட்டுமா? சரணடைந்து விடலாம்” என பதறியவாறு கூறிய வேளையில் திப்பு உதிர்த்த உன்னத வார்த்தைகள் தாம் மேலே கண்டவை.
இந்திய வரலாறு பல மாவீரர்களை கண்டிருந்தாலும் திப்பு சுல்தானுக்கு இணையான ஒரு விடுதலை வீரனை யாரோடும் ஒப்பிட முடியாது.

கெளரவ கொலைக்கு ஆதரவாக உ.பி போலீஸ் டி.ஐ.ஜி


DIG Satish Kumar Mathur

டெல்லி:தனது மகளை க்ரிமினல்கள் கடத்திச் சென்றதை குறித்து புகார் அளிக்க வந்த தந்தையிடம் ‘தற்கொலைச் செய்யுங்கள் அல்லது மகளை கொலைச் செய்ய வேண்டும்’ என்று கூறிய போலீஸ் டி.ஐ.ஜி சிக்கலில் மாட்டியுள்ளார்.

உத்தர பிரதேச மாநிலம் சஹரன்பூர் மண்டல டிஐஜி சதிஷ் குமார் மாத்தூர் இன்று வழக்கம் போல காவல் நிலையங்களுக்கு விசிட் கொடுத்தார். அப்போது ஒரு காவல் நிலையத்தில் பிரபுத்நகர் மாவட்டம் கசர்வா கிராமத்தைச் சேர்ந்த ஷவ்கீன் முகமது என்பவரை மாத்தூர் சந்தித்தார். ஷவ்கீனின் மகள் இஷ்ரத் ஜஹான்(14) ஓடிப் போய்விட்டதாகக் கூறப்படுகிறது.
இதைக் கேள்விப்பட்ட டிஐஜி இஷ்ரத்தின் தந்தையைப் பார்த்து, “உங்கள் மகளைக் கண்டுபிடித்துக் கொண்டு வர என்னிடம் மாயசக்தி ஒன்றும் இல்லை. உங்கள் மகள் ஓடிப்போயிருந்தால் நீங்கள் வெட்கி தற்கொலை செய்துகொண்டிருக்க வேண்டும். என் தங்கை மட்டும் இவ்வாறு செய்திருந்தால் அவளைக் கொன்றிருப்பேன் அல்லது நான் தற்கொலை செய்திருப்பேன்” என்றார்.
அவரின் கூற்று உள்ளூர் ஊடக கேமராக்களில் பதிவாகியுள்ளது. ஒரு டிஐஜியே கௌரவக் கொலையை ஆதரிக்கிறார் என்று பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வீட்டு வராண்டாவில் நின்று கொண்டிருந்த இஷ்ரத்தை 2 வாலிபர்கள் கடத்தியதாகக் கூறப்படுகிறது. அதே பகுதியைச் சேர்ந்த வாலிபர்கள் மொகின் சத்பல் மற்றும் ஒமா அத்ரா ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஆனால் இஷ்ரத் பற்றி எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. அந்த இருவரும் இஷ்ரத்தை கெடுத்து கொன்றிருக்கலாம் என்று போலீசார் சந்தேகப்படுகிறார்கள்.
இது குறித்து இஷ்ரத்தின் தந்தை ஷவ்கீன் கூறுகையில்,
“என் மகளை கடத்திச் சென்றுவிட்டனர். ஆனால் டிஐஜி அவள் ஓடிப்போய்விட்டதாகக் கூறுகிறார். அவருக்கு இந்த தகவல் எங்கிருந்து கிடைத்தது என்று தெரியவில்லை. ஊர் மக்கள் முன்னிலையில் என் மகள் கடத்தப்பட்டாள். போலீஸ் அதிகாரி சொல்வது போன்று என் மகள் ஓடிப்போயிருந்தாலும் அவள் ஒரு மைனர், நல்லது கெட்டது தெரியாதவள். அதனால் அவளை தேடிக் கண்டுபிடித்து பத்திரமாக ஒப்படைப்பது போலீசாரின் கடமை. ஆனால் டிஐஜி கௌரவ கொலைக்கு ஆதரவாகப் பேசுகிறார்” என்றார்.

இரவில் வேலைப் பார்க்கும் பெண்களுக்கு பாதுகாப்பில்லை – ஆய்வில் தகவல்!

Women feel unsafe in night shifts
புதுடெல்லி:இரவில் வேலைப் பார்க்கும் பெண்களின் பாதுகாப்பிற்காக அரசும், காவல்துறையும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும் அவர்களில் பெரும்பாலோர் பாதுகாப்பற்ற நிலையிலேயே பணியாற்றுவதாக அசோசியேட் சேம்பர்ஸ் ஆஃப் காமேர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரீ ஆஃப் இந்தியா நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
இரவு ஷிஃப்டில் வேலைப் பார்க்கும் 73 சதவீத பெண்களும் பாதுகாப்பற்ற நிலையிலேயே உள்ளனர். இந்தியாவின் 10 முக்கிய நகரங்களில் 2000க்கும் அதிகமான இரவு வேலைப்பார்க்கும் பெண்களிடம் நடத்திய ஆய்வில் இந்த விபரம் தெரியவந்துள்ளது.
சிறுதொழில்-மத்தியதர-பெரும் நிறுவனங்களில் பணியாற்றும் பெண்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பற்ற சூழல் நிலவுவது இந்தியாவின் தலைநகரான டெல்லியில் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
பெங்களூர், ஹைதராபாத், சென்னை, மும்பை ஆகிய நகரங்கள் டெல்லிக்கு அடுத்த இடங்களை வகிக்கின்றன. பி.பி.ஒ, ஐ.டி, மருத்துவமனை, ஊடகங்கள் ஆகிய துறைகளில் பணியாற்றும் பெண்கள்தாம் அதிகமான பாதுகாப்பற்ற சூழலை அனுபவிக்கின்றனர்.
வேலை நேரங்களிலும், அதற்கு பிறகும் இத்துறைகளில் பணியாற்றும் பெண்கள் உடல்ரீதியான, இதர தாக்குதல்களுக்கு ஆளாவதாக ஆய்வு கூறுகிறது.
வேலை முடிந்து செல்லும்பொழுது போதிய வாகன வசதிகள் இல்லாமை, பெண்களின் பாதுகாப்பை உறுதிச்செய்வதற்கு நிறுவனங்களில் போதுமான வசதிகள் இல்லாமை, சக ஊழியர்களின் மனிதநேயமற்ற நடவடிக்கைகள் ஆகியன பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழலை உருவாக்குவதில் முக்கிய காரணிகள் ஆகும்.
இரவில் பயண வசதிகள் இல்லாமல் மிகவும் பெண்கள் சிரமத்திற்கு ஆளாவது தலைநகர் டெல்லியில் ஆகும். மும்பை, கொல்கத்தா, சென்னை, புனே ஆகிய நகரங்கள் டெல்லிக்கு அடுத்த இடங்களை வகிக்கின்றன.
சிறுதொழில் நிறுவனங்களில் பணியாற்றும் பெண்கள்(21 சதவீதம்) மிகவும் மனோரீதியான பாதிப்புகளுக்கு ஆளாகின்றனர். மத்திய தர நிறுவனங்களில் இது 14 சதவீதம் ஆகும். பெரும் நிறுவனங்களில் 8 சதவீதம்.
பாதுகாப்பான சூழலை உருவாக்குவதன் மூலமே பெண்களுக்கு அதிக வாய்ப்புகளை உருவாக்க முடியும். பால் ரீதியான பாரபட்சம் பொருளாதாரத் துறையை மெதுவாக நொடியச் செய்யும் என ஆய்வு கூறுகிறது. நிறுவனங்களில் டிரைவர்கள் மற்றும் பாதுகாப்பு பணியாளர்களை நியமனம் செய்யும் பொழுது போலீஸ் பரிசோதனை நடத்துதல், புகார்களுக்கு தீர்வு காண்பதற்கான வசதிகளை ஏற்படுத்துதல் ஆகிய பரிந்துரைகள் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளன.