Wednesday, 18 April 2012

நற்சான்றிதழை பெறப் போவது மோடியா? அல்லது நமது நீதிமன்றமா?


நற்சான்றிதழை பெறப் போவது மோடியா? அல்லது நமது நீதிமன்றமா?


SIT certificate
2002-ஆம் ஆண்டு இந்திய வரலாற்றிலேயே மிகவும் கோரமான குஜராத் முஸ்லிம் இனப் படுகொலையின் வேளையில் நிகழ்த்தப்பட்ட குல்பர்கா ஹவுஸிங் சொசைட்டி கூட்டுப் படுகொலை வழக்கில் எஸ்.ஐ.டி மோடிக்கும் அவரது தோழர்களுக்கும் நற்சான்றிதழ் வழங்கியுள்ளது.
குஜராத் வீதிகளில் முஸ்லிம்களின் உயிர்களும், மானமும், சொத்துக்களும் சூறையாடப்பட்ட வேளியில் கர்ண கொடூரமாக ஹிந்துத்துவா பயங்கரவாதிகளால் நிகழ்த்தப்பட்ட கூட்டுப் படுகொலைகளில் ஒன்றுதான் குல்பர்கா ஹவுஸிங் கூட்டுப் படுகொலை. இங்கு பெண்களும், குழந்தைகளும் உள்பட 69 பேரை மிருகத்தனமாக ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் கொன்று குவித்தனர். இப்படுகொலையில் பலியானவர்களில் முன்னாள் காங்கிரஸ் எம்.பி.இஹ்ஸான் ஸாப்ரியும் அடங்குவார்.
குல்பர்கா கூட்டுப் படுகொலையில் மோடிக்கும், அவரது அமைச்சரவை, போலீஸ், கட்சி தோழர்களுக்கும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ பங்கிருப்பதாக குற்றம் சாட்டி கொலைச் செய்யப்பட்ட இஹ்ஸான் ஸாப்ரியின் மனைவி ஸாகியா ஜாஃப்ரி உச்சநீதிமன்றத்தில் புகார் மனுவை அளித்தார். இம்மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உச்சநீதிமன்றம் குல்பர்கா சொசைட்டி உள்பட குஜராத் இனப்படுகொலை வேளையில் நிகழ்த்தப்பட்ட 9 கூட்டுப் படுகொலைகள் குறித்து விசாரிக்கும் பொறுப்பை ஆர்.கே.ராகவன் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழுவிடம் ஒப்படைத்தது. விசாரணை தொடர்பான அறிக்கையை ஆர்.கே.ராகவன் தலைமையிலான சிறப்பு புலனாய்வுக்குழு அஹ்மதாபாத் மெட்ரோபாலிடன் சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. கூடவே, இவ்வழக்கை முடித்துக்கொள்ள கோரியும் மனு அளித்துள்ளது.

Saturday, 7 April 2012

பதில் சொல்வது எப்படி?


திருக்குர்ஆன் பாடம்: பதில் சொல்வது எப்படி?


திருக்குர்ஆன் பாடம்
கேள்விகள்… இன்று நாம் நிச்சயம் எதிர் கொள்ள வேண்டிய ஒரு விஷயம். அதிலும் குறிப்பாக அழைப்பு பணியில் இருப்பவர்களுக்கு கேள்விகள் என்பது தவிர்க்க முடியாதது. பதில் சொல்வதும் ஒரு கலைதான் என்று சொல்ல வேண்டும்.
இன்று நம்மில் பலர் விளக்கமாக பதில் சொல்கிறோம் என்ற பெயரில் பல நிமிடங்கள் சுற்றி வருவதை கண்டு வருகிறோம். இவ்வாறு செய்யும் போது, சில சமயம் கேள்வி கேட்டவருக்கு தான் கேட்ட கேள்வி என்ன என்பதே மறந்து விடுகிறது. இல்லையென்றால் பதில் அளிப்பவர் தான் என்ன சொல்ல வந்தோம் என்பதையே மறந்து விடுகிறார். புரியும் விதத்தில் பதில் அளிக்க வேண்டும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஆனால் நாம் சொல்ல கூடிய பதில் கேட்ட கேள்விக்கு பொருத்தமானதுதானா என்று முதலில் பார்க்க வேண்டும். அப்படியே பொருத்தமானது தான் என்றாலும் அதனை சுருக்கமாகவும் தெளிவாகவும் அளிக்க வேண்டும். இன்று விளக்கம் என்ற பெயரில் பல மணிநேரங்கள் வீணடிக்கப்படுவதைதான் நாம் கண்டு வருகிறோம்.
குர்ஆனும் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் வாழ்க்கையும் எவ்வாறு பதில் அளிக்க வேண்டும் என்பதை நமக்கு கற்று தருகின்றன. நபி(ஸல்) அவர்கள் இஸ்லாமிய பிரச்சாரத்தை எடுத்து வைத்த போது, அம்மக்கள் பல கேள்விகளை எடுத்து வைத்தார்கள். பெரும்பாலும் ஏகத்துவம், தூதுத்துவம் மற்றும் மறுமையை சுற்றியே அவர்களின் கேள்விகள் இருந்தன.

ஐ.நா மனித உரிமை பேரவையுடனான உறவைத் துண்டித்தது இஸ்ரேல்!


ஐ.நா மனித உரிமை பேரவையுடனான உறவைத் துண்டித்தது இஸ்ரேல்!


Israel-flagஐ.நா. மனித உரிமைகள் அமைப்பில் இஸ்ரேலுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டதால் ஐ.நா. மனித உரிமை அமைப்புடனான அனைத்து உறவுகளையும் துண்டிப்பதாக அந்நாடு அறிவித்துள்ளது.
பலஸ்தீனின் உரிமையை அபகரிக்கும் வகையில் இஸ்ரேலிய குடியேற்றங்கள் அமைக்கப்படுகின்றனவாஎன்பது குறித்து சர்வதேச அளவிலான விசாரணை நடத்த ஐ.நா. மனித உரிமை பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 
பாகிஸ்தான் தலைமையில் இஸ்லாமிய நாடுகள் கடந்த வாரம் இத்தீர்மானத்தை கொண்டுவந்தன. அமெரிக்கா மட்டுமே அத் தீர்மானத்தை எதிர்த்தது. 
இதைத் தொடர்ந்து ஐ.நா. மனித உரிமை பேரவையுடனான உறவைத் துண்டிப்பதாக இஸ்ரேல் அறிவித்திருக்கிறது.
இஸ்ரேலுக்கு எதிரான தீர்மானம்
இஸ்ரேலிய குடியேற்றங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணையை நடத்த உத்தரவிடும் தீர்மானம், ஜெனீவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அமைப்பின் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இஸ்ரேலிய குடியேற்றத் திட்டங்கள்பலஸ்தீனர்களின் உரிமைகளை மீறுகிறதா என்பதை ஆராய்வதற்கான சர்வதேச விசாரணை நடத்த வேண்டும், என்பது உட்பட இஸ்ரேலுக்கு எதிரானதீர்மானங்கள் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அமைப்பில் நிறைவேற்றப்பட்டுள்ளன.
எல்லைப் பகுதியில் இஸ்ரேலிய குடியிருப்புகளை அமைக்கும் இத்திட்டத்தின் மூலம் தங்களது பகுதியை ஆக்கிரமிக்கிறது என்பது பாலஸ்தீனத்தின் குற்றச்சாட்டு.
இது தொடர்பான தீர்மானத்தை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இஸ்லாமிய நாடுகள் சார்பில் பாகிஸ்தான் முன்வைத்தது. கியூபாவெனிஸுலா, நோர்வேஇந்தியாசீனாரஷ்யா உள்ளிட்ட 36 நாடுகள் இஸ்ரேலுக்கு எதிரான தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்தன. இத்தாலி,ஸ்பெயின்உட்பட 10 நாடுகள் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை.
அமெரிக்கா மட்டுமே இஸ்ரேலுக்கு ஆதரவாக அதாவது தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்தது.
இத்தகைய தீர்மானங்களை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகு நிராகரித்துள்ளார். தங்களது பிரதேசத்தில் இத்தீர்மானம் பதற்றத்தை அதிகரிக்கும் என்பது இஸ்ரேலின் கருத்தாகும்.

ஷஹீத் ஹஸன்-அல்-பன்னாஹ்


ஷஹீத் ஹஸன்-அல்-பன்னாஹ் – மறக்கமுடியாத இஸ்லாமிய ஆளுமை

Imam Hassan Al Bannah
நபி(ஸல்) கூறினார்கள்; “அல்லாஹுத்தாலா ஒவ்வொரு நூற்றாண்டின் ஆரம்பத்திலும் இந்த மார்க்கத்தை புனர்நிர்மாணம் செய்கின்ற ஒருவரை அனுப்பி வைக்கிறான்” (அபூதாவூத்)
ஒவ்வொரு  நூற்றாண்டின் ஆரம்பத்திலும் அல்லாஹ் இஸ்லாத்தை புனர்நிர்மாணிக்க ஒருவரை அனுப்பி வைக்கிறான் என்ற நபிமொழியின் அடிப்படையில், 20-வது நூற்றாண்டின் துவக்கத்தில் ஏகாதிபத்தியத்தின் கோரப் பிடியில் சிக்கிக்கொண்ட முஸ்லிம்களை காப்பாற்றவும், மேலும் இஸ்லாத்தின் கலாச்சாரத்தை பாதுகாக்கவும் எவராலும் ஒன்றும்  செய்ய முடியாத காலகட்டத்தில் அபூர்வமான, அசாதாரண தகுதிகளுடைய ஹஸனுல் பன்னாஹ்(ரஹ்…) அவர்களை அல்லாஹ் இந்த சமுதாயத்திற்கு அளித்தான்.
காலம்,வரலாறு, சூழல் உருவாக்கிய மனிதர் அல்ல. எவருடைய முயற்சியாலும் உருவான மனிதரும் அல்ல. அல்லாஹ்வின் விஷேட ஏற்பாட்டின் பெயரில் உதித்த மனிதராகவே நாம் ஹஸனுல் பன்னாஹ்வை காணமுடிகிறது. என இமாம் நத்வி கூறுகிறார்கள்.
“அல்-இஹ்வானுல் முஸ்லிமூன்”  என்ற இயக்கத்தை தொடங்கி இன்று எகிப்தில் மாபெரும் எழுச்சியை உருவாக்கிய, இவரது பெயரைக் கேட்டாலோ, அவர் தொடங்கிய இயக்கத்தின் பெயரைக் கேட்டாலோ முஸ்லிம் இலட்சியவாதி ஒருவரின் உள்ளம் புத்துணர்ச்சி பெறும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.
பத்து வயதிலேயே ஹஸனுல் பன்னாஹ்விடம் ஒரு சிறந்த மனிதருக்கான அனைத்து தகுதிகளும் இடம் பெற்றிருந்தன. அந்த வயதிலேயே அவர் இரண்டு இயக்கங்களை உருவாக்கினார்.

பெண் வேலைக்கு செல்தல் சட்டத்தீர்ப்பும் வரையறைகளும்


Girl-Teach


பெண் வேலைக்கு செல்தல் சட்டத்தீர்ப்பும் வரையறைகளும்>,...
ஹத்யுல் இஸ்லாம் பத்வா குழு
ஒரு பெண் வேலைக்குச் செல்வது ஹலாலாஅல்லது ஹராமாஅவ்வாறு வேலைக்குச் செல்வது ஹராமில்லையாயின் அவளுக்கு பொருத்தமான வேலை யாது?
பெண் வீட்டில் இருப்பதே அடிப்படையான விடயமாகும். தேவையேற்பட்டால் வெளியே சென்று வரமுடியும்.
"(நபியின் மனைவிகளே!) நீங்கள் உங்கள் வீடுகளிலேயே தங்கியிருங்கள். முன்னர் ஜாஹிலிய்யா காலத்தில் (பெண்கள்) திரிந்து கொண்டிருந்ததைப் போல் நீங்கள் திரியாதீர்கள்" (33:33)
இந்த அழைப்பு நபி (ஸல்) அவர்களின் மனைவிமார்களை பார்த்து விடுக்கப்பட்டாலும்இது முஃமினான பெண்களுக்கும் பொருந்தும். நபி (ஸல்) அவர்களின் மனைவிமாரை விளித்து பேசியதன் காரணம் அவர்களின் கண்ணியத்தை சுட்டிக்காட்டவே ஆகும். அவர்கள்தான் முஃமினான பெண்களுக்கான முன்மாதிரியாகும்.
ஒரு முஸ்லிம் பெண் தனது தேவைக்காக அல்லது தனது பிள்ளைகளுக்காக அல்லது வயோதிபத்தை அடைந்த பெற்றோருக்காக என்பன போன்ற காரணங்களுக்காக ஒரு தொழிலுக்கு செல்ல முடியும். அதே போன்றே அவளின் சேவை இந்த சமூகத்திற்கு தேவையாக இருக்கும் சந்தர்ப்பத்திலும் தொழிலுக்கு செல்லலாம். உதாரணமாக: பெண்களுக்கு வைத்தியம் பார்த்தல்,தாதியாக கடமையாற்றுதல்பெண்பிள்ளைகளுக்கு கற்பித்தல்.
இதற்கான சில வரையறைகள் வருமாறு:
01. அவளின் தொழில் ஹராமானதாகவோ அல்லது ஹராத்துக்கு இட்டுச்செல்வதாகவோ இருக்கக்கூடாது. உதாரணமாக: ஹராமான ஆண் பெண் கலப்புஹராமான ஆண் பெண் தனித்திருத்தல்ஒரு மஹ்ரமியின்றி பயணம் செய்தல்திருமணமாகாத ஆணுக்கு பணிப்பெண்ணாக வேலை செய்தல்ஒரு பணிப்பாளரின் தனிப்பட்ட செயலாளராக இருத்தல்,மதுபான சாலையில் பணிப்பெண்ணாக இருத்தல்விமானப்பணிப்பெண்ணாக இருத்தல் (இந்நிலையில் மதுபானங்களை வழங்க வேண்டிய நிலை ஏற்படும்ஒரு மஹ்ரமியின் துணையின்றி தனியாக பயணிக்க வேண்டிவரும்.)

சிறுவர் துஷ்பிரயோகத்தில் ஈடுபடும் ஒரு குற்றிவாளியையேனும் பகிரங்கமாகத் தூக்கிலிட வேண்டும் – அமைச்சர் திஸ்ஸ கரலியத்த


சிறுவர் துஷ்பிரயோகத்தில் ஈடுபடும் ஒரு குற்றிவாளியையேனும் பகிரங்கமாகத் தூக்கிலிட வேண்டும் – அமைச்சர் திஸ்ஸ கரலியத்த



Tissaசிறுவர் துஷ்பிரயோகங்களைப் பாதுகாக்க வேண்டுமாயின் அத்தகைய குற்றங்களில் ஈடுபடும் ஒருவரையேனும் பகிரங்கமாகத் தூக்கிலிட வேண்டும், அவர்களுக்கு எந்தவொரு மன்னிப்பும் வழங்கக் கூடாது என சிறுவர் அபிவிருத்தி, மகளிர் விவகார அமைச்சர் திஸ்ஸ கரலியத்த தெரிவித்தார்.
கொழும்பில் நடைபெற்ற வைபமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
புதிது புதிதாகச் சட்டங்களை உருவாக்க முன்னர் ஏற்கனவே அமுலில் உள்ள சட்டங்களை உரிய முறையில் நடைமுறைப்படுத்த வேண்டும். சிறுவர் துஷ்பிரயோகம், பெண்கள், சிறுவர்களை பலவந்தமாக துஷ்பிரயோகப்படுத்தல் போன்றவற்றில் ஈடுபட்டவர்களுக்கு பிணை வழங்குதலும், அவர்கள் சார்பாக நீதிமன்றங்களில் ஆஜராகுதலும் ஒழுக்கரீதியாக ஏற்றுக்கொள்ளக் கூடிய செயல்களல்ல என்றும் அவர் தெரிவித்தார்.