Friday, 11 May 2012

சிரியா மீது அவதானத்தை செலுத்த வேண்டும், இல்லாவிட்டால் சிவில் யுத்தம் உருவாகுவதைத் தடுக்க முடியாது


Mideast-Syriaசிரியாவில் முன்னெடுக்கப்படும் அமைதி செயற்பாடு அங்கு சிவில் யுத்தத்தை தவிர்க்கும் கடைசி முயற்சி என ஐ. நா. மற்றும் அரபு லீக் விசேட தூதுவர் கொபி அனான் பாதுகாப்புச் சபைக்கு விளக்கமளித்துள்ளார்.
பாதுகாப்புச் சபையின் நிறைவு கூட்டத் தொடரின் போது சுவிட்சர்லாந்து தலைநகர் ஜெனீவாவில் இருந்து கொபி அனான் சிரியா விவகாரம் குறித்து விளக்கமளித்தார். அதில் சிரியாவில் தொடர்ந்தும் வன்முறைகள் இடம்பெறுவதாக அனான் குறிப்பிட்டார். எனினும் சிரிய இராணுவம் தற்போது கனரக ஆயுதங்களை பயன்படுத்துவதை குறைத்திருப்பதாக அவர் கூறினார்.

சிரியாவில் நிவாரண நடவடிக்கைகளுக்கு மேலதிகமாக 27 மில்லியன் டொலர்களை செஞ்சிலுவை சங்கம் கோரியுள்ள நிலையிலேயே அனானின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. சிரியாவில் இயங்கும் ஒரே சர்வதேச தொண்டு நிறுவனமான செஞ்சிலுவை சங்கம்சிரியாவில் தொடர்ந்தும் ஆயிரக்கணக்கானோர் மனிதாபிமான உதவிகளை வேண்டிநிற்பதாக அறிவித்துள்ளது.

இதில் சிரியாவில் தீவிரமடைந்திருக்கும் துன்புறுத்தல்கள்கைதி நடவடிக்கைகள் மற்றும் ஏனைய வன்முறைகள் தொடர்பில் கவனத்திற்கு கொண்டுவந்திருப்பதாக கொபி அனான் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் சிரியாவில் இராணுவ செயற்பாடுகளை நிறுத்துவது ஜனாதிபதி பஷர் அல் அஸதின் கையில்தான் இருக்கிறது என்று பாதுகாப்புச் சபையை அறிவுறுத்தினார்.

கடந்த மூன்றரை ஆண்டுகளில் 16 கருணை மனுக்களில் முடிவு!


ப.சிதம்பரம்

புதுடெல்லி:கடந்த மூன்றரை ஆண்டுகளில் 16 கருணை மனுக்கள் மீது முடிவெடுக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் மாநிலங்களவையில் நேற்று(புதன்கிழமை) தெரிவித்தார்.

மாநிலங்களவையில் இதுக்குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில் ப.சிதம்பரம் கூறியது: உலகம் முழுவதும் மரண தண்டனை தொடர்பாக 2 விதமான கருத்துகள் உள்ளன. ஒன்று, மரண தண்டனையை ஒழிப்பது. மற்றொன்று குறிப்பிட்ட சில வழக்குகளுக்கு மட்டும் மரண தண்டனையை ஏற்பது. இந்தியச் சட்டம் அரிதினும் அரிதாக மரண தண்டனையை பரிந்துரைக்கிறது.
மரண தண்டனையை ஒழிப்பதற்கு சட்ட ஆணையம் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. எனவே, மரண தண்டனை குறித்து மத்திய அரசு எந்த முடிவையும் எடுக்கவில்லை.
எனவே, இப்போதைக்கு மரண தண்டனை பற்றி எந்த மறு ஆய்வும் இல்லை. ஆனால், மறு ஆய்வுக்கான காலம் வரும். குடியரசுத் தலைவரால் மரண தண்டனையைக் குறைக்க முடியும். மொத்தம் 16 கருணை மனுக்கள் மீது குடியரசுத் தலைவர் முடிவெடுத்துள்ளார். அவரது முடிவு குறித்து நான் எனது கருத்தைக் கூற முடியாது.

மாவீரன் திப்புசுல்தான் நினைவு நாள்


மாவீரன் திப்புசுல்தான்

இன்று மாவீரன் திப்பு சுல்தான் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கெதிராக தனது இன்னுயிரை தியாகம் செய்த நாள்.

1799 ஆம் மே மாதம் நான்காம் தேதி சாதாரண சிப்பாய் போல் ஆங்கிலேய அந்நிய படைக்கெதிராக களமிறங்கி தனது உடலில் கடைசி மூச்சு நிற்கும் வரை உறுதியுடன் போராடி உயிர் தியாகியானார் மாவீரன் திப்பு. அந்த வீரத் திருமகனின் வரலாற்றை நினைவுக்கூறுவது இந்திய தேசத்தின் விடுதலை வரலாற்றையே நினைவுக்கூறுவதற்கு சமமாகும்.
“ஆடுகளைப் போல 200 ஆண்டுகள் வாழ்ந்து பிழைப்பதை விடப் புலியைப் போல 2 நாட்கள் வாழ்ந்து மடியலாம்”
எதிரிகளுடன் தீரமுடன் போரிட்டு குண்டு காயங்களுடன் கோட்டை வாயிலில் சரிந்து கிடந்த திப்புவிடம் அவரது பணியாள், “அரசே! யாரேனும் ஒரு ஆங்கிலேயே அதிகாரியை அழைக்கட்டுமா? சரணடைந்து விடலாம்” என பதறியவாறு கூறிய வேளையில் திப்பு உதிர்த்த உன்னத வார்த்தைகள் தாம் மேலே கண்டவை.
இந்திய வரலாறு பல மாவீரர்களை கண்டிருந்தாலும் திப்பு சுல்தானுக்கு இணையான ஒரு விடுதலை வீரனை யாரோடும் ஒப்பிட முடியாது.

கெளரவ கொலைக்கு ஆதரவாக உ.பி போலீஸ் டி.ஐ.ஜி


DIG Satish Kumar Mathur

டெல்லி:தனது மகளை க்ரிமினல்கள் கடத்திச் சென்றதை குறித்து புகார் அளிக்க வந்த தந்தையிடம் ‘தற்கொலைச் செய்யுங்கள் அல்லது மகளை கொலைச் செய்ய வேண்டும்’ என்று கூறிய போலீஸ் டி.ஐ.ஜி சிக்கலில் மாட்டியுள்ளார்.

உத்தர பிரதேச மாநிலம் சஹரன்பூர் மண்டல டிஐஜி சதிஷ் குமார் மாத்தூர் இன்று வழக்கம் போல காவல் நிலையங்களுக்கு விசிட் கொடுத்தார். அப்போது ஒரு காவல் நிலையத்தில் பிரபுத்நகர் மாவட்டம் கசர்வா கிராமத்தைச் சேர்ந்த ஷவ்கீன் முகமது என்பவரை மாத்தூர் சந்தித்தார். ஷவ்கீனின் மகள் இஷ்ரத் ஜஹான்(14) ஓடிப் போய்விட்டதாகக் கூறப்படுகிறது.
இதைக் கேள்விப்பட்ட டிஐஜி இஷ்ரத்தின் தந்தையைப் பார்த்து, “உங்கள் மகளைக் கண்டுபிடித்துக் கொண்டு வர என்னிடம் மாயசக்தி ஒன்றும் இல்லை. உங்கள் மகள் ஓடிப்போயிருந்தால் நீங்கள் வெட்கி தற்கொலை செய்துகொண்டிருக்க வேண்டும். என் தங்கை மட்டும் இவ்வாறு செய்திருந்தால் அவளைக் கொன்றிருப்பேன் அல்லது நான் தற்கொலை செய்திருப்பேன்” என்றார்.
அவரின் கூற்று உள்ளூர் ஊடக கேமராக்களில் பதிவாகியுள்ளது. ஒரு டிஐஜியே கௌரவக் கொலையை ஆதரிக்கிறார் என்று பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வீட்டு வராண்டாவில் நின்று கொண்டிருந்த இஷ்ரத்தை 2 வாலிபர்கள் கடத்தியதாகக் கூறப்படுகிறது. அதே பகுதியைச் சேர்ந்த வாலிபர்கள் மொகின் சத்பல் மற்றும் ஒமா அத்ரா ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஆனால் இஷ்ரத் பற்றி எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. அந்த இருவரும் இஷ்ரத்தை கெடுத்து கொன்றிருக்கலாம் என்று போலீசார் சந்தேகப்படுகிறார்கள்.
இது குறித்து இஷ்ரத்தின் தந்தை ஷவ்கீன் கூறுகையில்,
“என் மகளை கடத்திச் சென்றுவிட்டனர். ஆனால் டிஐஜி அவள் ஓடிப்போய்விட்டதாகக் கூறுகிறார். அவருக்கு இந்த தகவல் எங்கிருந்து கிடைத்தது என்று தெரியவில்லை. ஊர் மக்கள் முன்னிலையில் என் மகள் கடத்தப்பட்டாள். போலீஸ் அதிகாரி சொல்வது போன்று என் மகள் ஓடிப்போயிருந்தாலும் அவள் ஒரு மைனர், நல்லது கெட்டது தெரியாதவள். அதனால் அவளை தேடிக் கண்டுபிடித்து பத்திரமாக ஒப்படைப்பது போலீசாரின் கடமை. ஆனால் டிஐஜி கௌரவ கொலைக்கு ஆதரவாகப் பேசுகிறார்” என்றார்.

இரவில் வேலைப் பார்க்கும் பெண்களுக்கு பாதுகாப்பில்லை – ஆய்வில் தகவல்!

Women feel unsafe in night shifts
புதுடெல்லி:இரவில் வேலைப் பார்க்கும் பெண்களின் பாதுகாப்பிற்காக அரசும், காவல்துறையும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும் அவர்களில் பெரும்பாலோர் பாதுகாப்பற்ற நிலையிலேயே பணியாற்றுவதாக அசோசியேட் சேம்பர்ஸ் ஆஃப் காமேர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரீ ஆஃப் இந்தியா நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
இரவு ஷிஃப்டில் வேலைப் பார்க்கும் 73 சதவீத பெண்களும் பாதுகாப்பற்ற நிலையிலேயே உள்ளனர். இந்தியாவின் 10 முக்கிய நகரங்களில் 2000க்கும் அதிகமான இரவு வேலைப்பார்க்கும் பெண்களிடம் நடத்திய ஆய்வில் இந்த விபரம் தெரியவந்துள்ளது.
சிறுதொழில்-மத்தியதர-பெரும் நிறுவனங்களில் பணியாற்றும் பெண்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பற்ற சூழல் நிலவுவது இந்தியாவின் தலைநகரான டெல்லியில் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
பெங்களூர், ஹைதராபாத், சென்னை, மும்பை ஆகிய நகரங்கள் டெல்லிக்கு அடுத்த இடங்களை வகிக்கின்றன. பி.பி.ஒ, ஐ.டி, மருத்துவமனை, ஊடகங்கள் ஆகிய துறைகளில் பணியாற்றும் பெண்கள்தாம் அதிகமான பாதுகாப்பற்ற சூழலை அனுபவிக்கின்றனர்.
வேலை நேரங்களிலும், அதற்கு பிறகும் இத்துறைகளில் பணியாற்றும் பெண்கள் உடல்ரீதியான, இதர தாக்குதல்களுக்கு ஆளாவதாக ஆய்வு கூறுகிறது.
வேலை முடிந்து செல்லும்பொழுது போதிய வாகன வசதிகள் இல்லாமை, பெண்களின் பாதுகாப்பை உறுதிச்செய்வதற்கு நிறுவனங்களில் போதுமான வசதிகள் இல்லாமை, சக ஊழியர்களின் மனிதநேயமற்ற நடவடிக்கைகள் ஆகியன பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழலை உருவாக்குவதில் முக்கிய காரணிகள் ஆகும்.
இரவில் பயண வசதிகள் இல்லாமல் மிகவும் பெண்கள் சிரமத்திற்கு ஆளாவது தலைநகர் டெல்லியில் ஆகும். மும்பை, கொல்கத்தா, சென்னை, புனே ஆகிய நகரங்கள் டெல்லிக்கு அடுத்த இடங்களை வகிக்கின்றன.
சிறுதொழில் நிறுவனங்களில் பணியாற்றும் பெண்கள்(21 சதவீதம்) மிகவும் மனோரீதியான பாதிப்புகளுக்கு ஆளாகின்றனர். மத்திய தர நிறுவனங்களில் இது 14 சதவீதம் ஆகும். பெரும் நிறுவனங்களில் 8 சதவீதம்.
பாதுகாப்பான சூழலை உருவாக்குவதன் மூலமே பெண்களுக்கு அதிக வாய்ப்புகளை உருவாக்க முடியும். பால் ரீதியான பாரபட்சம் பொருளாதாரத் துறையை மெதுவாக நொடியச் செய்யும் என ஆய்வு கூறுகிறது. நிறுவனங்களில் டிரைவர்கள் மற்றும் பாதுகாப்பு பணியாளர்களை நியமனம் செய்யும் பொழுது போலீஸ் பரிசோதனை நடத்துதல், புகார்களுக்கு தீர்வு காண்பதற்கான வசதிகளை ஏற்படுத்துதல் ஆகிய பரிந்துரைகள் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளன.

சீதையைப் போல வாழணுமா? – அதெல்லாம் புராண காலம் – நீதிமன்றத்தில் ருசிகரம்!


A wife should be like goddess Sita- Bombay HC
மும்பை:புராணங்களை நிஜ வாழ்க்கையில் எல்லாம் அமல்படுத்த நினைத்தால் என்ன நடக்கும். இது நீதிபதிகளுக்கும் தெரிவதில்லை. ராமருடன் சீதை காட்டுக்குப் போன புராண கதையை உதாரணம் காட்டிய நீதிபதிகளுக்கு பெண்ணொருத்தி கறாராக பதிலளித்துள்ளார்.
இந்திய ஷிப்பிங் கார்ப்பரேஷனில் பணிபுரியும் கணவர் அந்தப் பெண்ணை 2000-த்தில் திருமணம் செய்துகொண்டார். அவர் கொல்கத்தாவைச் சேர்ந்தவர். அந்தப் பெண் மும்பையைச் சேர்ந்தவர். 5 ஆண்டுகள் அவர் கப்பலில் சென்று பணி செய்தார். அப்போது மனைவி மும்பையில் இருந்தார். 2005-ல் அவருக்கு போர்ட் பிளேரில் நிலத்திலேயே வேலை போட்டுக்கொடுத்தார்கள். ஆனால் மனைவி அவருடன் செல்ல மறுத்துவிட்டார். இப்போது மணவாழ்வின் பரிசாக 9 வயதில் மகள் இருக்கிறார்.
போர்ட் பிளேர் வர முடியாது என்று மனைவி பிடிவாதமாக மறுத்துவிட்டதால் கணவர் விவாகரத்து கோரி வழக்கு தொடுத்தார்.
நீதிபதிகள் இந்த வழக்கைக் கேட்டு திகைத்துப் போய், “இந்த ஒரு காரணத்துக்காகவா பிடிவாதம் பிடிப்பது? கணவர் பணிபுரியும் ஊருக்குப் போங்களம்மா” என்று அறிவுரை கூறினார்கள். ராமருடன் சீதை காட்டுக்கே போன கதையையும் கூறினார்கள்.
ஆனால் அந்த பெண்மணியோ, “அதெல்லாம் புராணத்தோடு போகட்டும், என்னால் போர்ட் பிளேர் போக முடியாது” என்று கறாராகக் கூறிவிட்டார். இதனைத் தொடர்ந்து இவ்வழக்கின் விசாரணை ஜூன் 21-ஆம் தேதிக்கு  ஒத்திவைக்கப்பட்டது.

Wednesday, 9 May 2012

ஹிந்து பத்திரிகையின் ஹிந்துத்துவா மனோபாவம்! தர்மம்!! பத்திரிக்கை (அ)தர்மம


ஹிந்து பத்திரிகையின் ஹிந்துத்துவா மனோபாவம்! தர்மம்!! பத்திரிக்கை (அ)தர்மம


கடந்த மே மாதம் 3-ஆம் தேதி தென்னிந்தியாவின் பிரபல பத்திரிகையான ‘தி ஹிந்துவின் ஆந்திர மாநில பதிப்பின் முதல் பக்கத்தில் மிக முக்கியத்துவத்துடன் வெளியான செய்தி பலரையும் குறிப்பாக ஹைதராபாத் மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ஒரு சாதாரண உள்ளூர் செய்தி பிரபலமான ‘தி ஹிந்து’ பத்திரிகையின் முன்பக்கத்தில் ‘Accusedalleged police torture’ என்று வெளியாகியிருந்தது.

ஹைதராபாத் பழையநகரில் முஸ்லிம்-இந்து கலவரத்தைத் தூண்ட ஹனுமான கோயிலில் மாட்டுக் கறியை வீசிய ஹிந்து வாஹினி என்ற ஹிந்துத்துவா தீவிரவாத அமைப்பின் உறுப்பினர்கள் என்.நாகராஜு என்பவர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்திருந்தனர். இதில் என்.நாகராஜு என்பவர் போலீஸார் தன்னை சித்திரவதைச் செய்ததாக குற்றம் சாட்டிய செய்தியைத்தான் தி ஹிந்து தனது முதல் பக்கத்தில் வெளியிட்டு ஹிந்துத்துவா விசுவாசத்தை காட்டியுள்ளது.

‘தி ஹிந்து’வில் வெளியான இச்செய்தி ஒருதலைபட்சமான முறையிலும், போலீஸ் தரப்பில் இருந்து எவ்வித விளக்கத்தையும் பெறாமலேயே வெளியிடப்பட்டுள்ளது.

இச்செய்தியை படித்த முஸ்லிம்களுக்கு ஆச்சரியம். ஏனெனில் மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு வழக்கில் அநியாயமாக 150 முஸ்லிம் இளைஞர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் ஹைதராபாத் கலவர வழக்கிலும் அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் பாரபட்சமாக கைது செய்யப்பட்டு சித்திரவதைச் செய்யப்பட்டனர். அப்பொழுதெல்லாம் இதனை முதல் பக்க செய்தியாகவோ, முக்கியத்துவம் வாய்ந்த செய்தியாகவோ வெளியிடாத ஹிந்து பத்திரிகை, குற்றவாளி தானே இக்குற்றத்தை செய்ததாக வாக்குமூலம் அளித்த வழக்கில் ஒருதலைபட்சமாக செய்தியை வெளியிட்டுள்ளதுதான் ஆச்சரியத்திற்கு காரணம் ஆகும்.

இதுக்குறித்து ஹைதராபாத்தை மையமாக கொண்டு இயங்கும் சிவில் லிபர்டீஸ் மானிட்டரிங் கமிட்டியின் பொதுச்செயலாளர் லத்தீஃப் முஹம்மது கான் கூறுகையில், ‘உண்மையில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் போலீஸ் காவலில் வைத்து சித்திரவதைச் செய்யப்பட்டிருந்தால் நாங்கள் அதனை வன்மையாக கண்டிக்கிறோம். ஆனால், திஹிந்து இச்செய்தியை இந்த அளவுக்கு பரப்பரப்பான செய்தியாக வெளியிட்டிருக்க கூடாது. ஹைதராபாத்தில் முஸ்லிம் இளைஞர்கள் ஏராளமானோர் கைது செய்யப்பட்டு 7 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து சித்திரவதைச் செய்யப்பட்டனர். அந்த செய்தியை ஏன் தி ஹிந்து பத்திரிகை இதேமுறையில் வெளியிடவில்லை?

இடதுசாரி தீவிரவாதத்தை எதிர்த்து போராடுகிறோம் என்ற பெயரில் பழங்குடியின மக்கள் வாழும் பகுதிகளில் போலீஸார் நடத்தும் அராஜகங்களை ஏன் இதே ரீதியில் தி ஹிந்து பத்திரிகை வெளியிடவில்லை?

ஹிந்து திடீரெனதனது பாலிசியைமாற்ற தூண்டியதுஎது? என்பதை குறித்து வாசகர்களுக்கு விளக்க கடமைப்பட்டுள்ளது’ என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், ’வலதுசாரி தீவிரவாத அமைப்புகள் எந்த அளவு கட்டமைப்புடன் செயல்படுகின்றார்கள் என்பதற்கு இச்செய்தி ஓர் உதாரணமாகும். தங்களது உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டால் தமது முகத்தை மறைப்பதற்காக எதனையும் செய்ய அவர்கள் துணிந்து விடுகின்றார்கள்.

ஹிந்துவில் வெளியான செய்தி பொதுமக்களின் அனுதாபத்தை பெறும் நோக்கில் வெளியிடப்பட்டுள்ளது. அனைத்து முக்கிய ஊடகங்களிலும் வலதுசாரி அமைப்பினர் ஊடுருவியுள்ளனர். இதில் ஹிந்துவும் விதிவிலக்கல்ல.’ என்று கூறினார்.

மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு வழக்கில் அநியாயமாக கைது செய்யப்பட்ட முஸ்லிம் இளைஞர்களில் செய்யத் இம்ரான் கானும் ஒருவர் ஆவார். இவர் ஒரு பொறியியல் பட்டப்படிப்பு மாணவர். இவ்வழக்கில் பின்னர் இவர் அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்து நிரபராதி என விடுவிக்கப்பட்டார். அவர் ஹிந்து பத்திரிகையில் வெளியான செய்தி குறித்து கூறியது: ‘நான் கைது செய்யப்பட்ட பொழுது ஹிந்து உள்ளிட்ட அனைத்து முக்கிய ஆங்கில மற்றும் தெலுங்கு ஊடகங்கள் தீவிரவாதி கைது செய்யப்பட்டான்(விசாரிக்காமலேயே) என்று செய்தி வெளியிட்டன. நான் பல நாட்கள் போலீஸ் காவலில் வைத்து சித்திரவதைச் செய்யப்பட்டேன், இதனை நான் மாஜிஸ்ட்ரேட்டிடம் கூறினேன். ஆனால், இதனை எந்தவொரு முக்கிய ஊடகமும் செய்தியாக வெளியிடவில்லை. ஆனால், நான் விடுவிக்கப்பட்ட பொழுது 3 வரிகளில் செய்தியை ஊடகங்கள் வெளியிட்டன.

ஆனால், ஹிந்து பத்திரிகை நான் விடுதலையானதை கூட செய்தியாக வெளியிடவில்லை. ஊடகங்களின் இத்தகைய பாரபட்சமான போக்கு எனது வாழ்க்கையையும், வாய்ப்புகளையும் தகர்த்துவிட்டது. ஹிந்து பத்திரிகையின் முதல் பக்கத்தில் கடந்த மே 3-ஆம் தேதி வெளியான செய்தியை பார்த்து நான் அதிர்ச்சி அடைந்தேன். குற்றவியல் பின்னணியைக் கொண்ட ஹிந்துவாஹினி என்ற அமைப்பைச் சார்ந்தவர் சித்திரவதைச் செய்யப்பட்டதாக புகார் கூறும் செய்தியை ஹிந்து முதல் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. ஆனால், எவ்வித குற்றப் பின்னணியும் இல்லாத பொறியியல் மாணவரான நான் சித்திரவதைச் செய்யப்பட்ட பொழுது 3 வரிகளில் கூட இச்செய்தியை ஹிந்து வெளியிடவில்லை.

அனைவரும் சொல்வார்கள், ஆங்கில மீடியாக்கள் முஸ்லிம்களுக்கு எதிராக மிகவும் தீவிரமாக பாரபட்சமாக நடந்துகொள்கிறது என்று. நான் அவர்கள் கூறுவது பற்றி அலட்டிக் கொள்ளவில்லை. ஆனால், இச்செய்தியை பார்த்த பிறகு என்னைப் போன்ற முஸ்லிம்களுக்கு எதிராக மீடியாக்கள் நடந்துகொள்ளும் பாரபட்சத்தை நம்பும் நிலைக்கு நான் தள்ளப்பட்டுள்ளேன்’ என்றார்.

டாக்டர் இப்ராஹீம் அலி ஜுனைத் மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு வழக்கில் அநியாயமாக கைது செய்யப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட அப்பாவி முஸ்லிம் இளைஞர்களில் ஒருவர். இவர் கைது செய்யப்பட்டு போலீஸ் ஃபார்ம் ஹவுஸில் வைத்து பல நாட்கள் சித்திரவதைச் செய்யப்பட்டார். செய்யத் இம்ரான் கானைப் போலவே இவரும் தனக்கு இழைக்கப்பட்ட சித்திரவதைகளைக் குறித்து மாஜிஸ்ட்ரேட்டிடம் முறையிட்டார். ஆனால், இச்செய்தியை எந்த பத்திரிகைகளும் வெளியிடவில்லை.

அவர் கூறுகையில், ‘நாங்கள் போலீசாரால் கடத்திச் செல்லப்பட்டு சித்திரவதைச் செய்யப்பட்ட செய்தியை உருது ஊடகங்கள் வெளியிட்டன. அப்பொழுதும் ஆங்கில மீடியாக்கள், அந்த உருது மீடியாக்களை தீவிரவாதிகளின் ஆதரவாளர்கள் என அவமதித்தன.

நாங்கள் கைது செய்யப்பட்ட பொழுது போலீசாரின் கூற்றை நம்பி எங்களை தீவிரவாதிகள் என முடிச்செய்யும் வகையில் செய்திகள் வெளியானது. ஆனால், நாங்கள் விடுவிக்கப்பட்ட பொழுது ஹிந்து உள்ளிட்ட எந்த முக்கிய ஊடகமும் அச்செய்திக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை.

நாகராஜு ஒரு ஹிந்து மற்றும் ஹிந்து வாஹினி என்ற அமைப்பின் உறுப்பினர் என்பதால் அவர் தொடர்பான செய்தி முதல் பக்கத்தில் முக்கியத்துவத்துடன் ஹிந்துவில் வெளியானது. அவர் ஒரு முஸ்லிமாக இருந்திருந்தால் 4-வது பக்கத்தில் 2 வரிகளில் செய்தியை முடித்து இருப்பார்கள்.’ என்றார்.

இச்செய்தி குறித்து ஹிந்துப் பத்திரிகை மழுப்பலான பதிலை தெரிவித்துள்ளது. ஆந்திர மாநில தி ஹிந்து பத்திரிகையின் முதன்மை அதிகாரி எஸ்.நாகேஷ் குமார் கூறுகையில், “நாங்கள் எந்த வலதுசாரி இயக்கம் அல்லது குழுவையும் எங்களை தவறாக பயன்படுத்த அனுமதிப்பதில்லை. எங்களுக்கு கிடைத்த செய்தியை முன்பக்கத்தில் வெளியிட்டோம்.

மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு வழக்கில் முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்ட போதும் நாங்கள் செய்தி வெளியிட்டோம். ஆனால், அதுமுதல் பக்கத்தில் முக்கிய செய்தியாக வரவில்லை. ஆனால் அதனை ஆவணப்படுத்தியுள்ளோம். எங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் அடிப்படையற்றது’ என்று தெரிவித்தார்.

ஹிந்துவில் வெளியான செய்திக் குறித்து ஹைதராபாத் கலவர வழக்கை விசாரிக்கும் சிறப்பு புலனாய்வுக்குழு மற்றும் குற்றவியல் ஏ.சி.பி முஹம்மது அஹ்ஸன் ராஸா கூறுகையில், ‘இச்செய்தி அடிப்படையற்றது. நாங்கள் குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் எவ்வித 3-ம் தர சித்திரவதைகளையும் வாக்குமூலம் பெற மேற்கொள்ளவில்லை. அவர்களே ஹனுமான் கோயிலில் மாட்டிறைச்சியை கலவரத்தை தூண்ட வீசியதாக ஒப்புக்கொண்டுள்ளனர். இதற்கு எங்களிடம் தெளிவான ஆதாரமும் உள்ளது. எனது குழுவினர் திறமையுடன் செயல்பட்டு பதட்டமான இவ்வழக்கில் முக்கிய ஆதாரத்தை கண்டுபிடித்துள்ளோம். ஆனால் சில ஆதிக்க சக்திகள் பொதுமக்கள் ஆதரவை பெறுவதற்காக மீடியா மூலமாக போலீசாருக்கு அவப்பெயரை உருவாக்க விரும்புகின்றனர்.’ என தெரிவித்தார்.

புலனாய்வுதுறை துணை போலீஸ் கமிஷனர் பி.விக்டர் கூறுகையில், ‘நாங்கள் வாக்குமூலம் பெற எவ்வித சட்டத்திற்கு புறம்பான முறைகளையும் பிரயோகிக்கவில்லை. நாங்கள் இக்குற்றச்சாட்டைக் குறித்து குற்றம் சாட்டப்பட்டவரின் வழக்கறிஞருக்கும், தி ஹிந்து பத்திரிகைக்கும் நீதிமன்றத்தில் பதில் அளிப்போம்’ என்றார்.

நீதிமன்ற வளாகத்தில் முக்கிய வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவரிடம் பேட்டி மற்றும் புகைப்படம் எடுக்க போலீசார் எவ்வாறு அனுமதித்தனர் என்பது புதிராகவே உள்ளது. சிலர் இச்செய்திக் குறித்து கருத்து தெரிவிக்கையில், போலீஸ் துறையில் உள்ள சிலரே ஹிந்துத்துவா வலதுசாரி உறுப்பினர்களுக்கு ஆதரவாக சித்து விளையாட்டு ஒன்றை நடத்தியிருக்கலாம்’ என்று சந்தேகிக்கின்றனர்.