7 Aug 2012

லண்டன்:உலகில் ஒரு பில்லியன் மக்கள்(நூறு கோடி) கொடிய பட்டினியால் வாடுவதாக சர்வதேச மனிதஉரிமை அமைப்பான ஆக்ஸ்ஃபாம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த எண்ணிக்கை உலக மக்கள் தொகையில் 7இல் ஒரு பகுதியாகும்.
பொருளாதார முன்னேற்றம் மற்றும் வளர்ச்சியின் நூற்றாண்டு என புகழப்படும் இந்த யுகத்திலும் இவ்வளவு மனிதர்கள் பட்டினியால் வாடுவது உலக மக்கள் சமூகத்திற்கு அவமானமாகும்.
வளர்ச்சியடைந்த நாடுகளிலும் வித்தியாசம் எதுவும் இல்லை என்பது உலகமக்களை மாத்தியோசிக்க தூண்டவேண்டும்.
இந்த ஆண்டு மட்டும் 4 கோடியே 30 லட்சம் பேர் கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் உணவு பற்றாக்குறை காரணமாக வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ளவர்களின் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.
கோடிக்கணக்கான குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைவினால் துயரத்தை அனுபவிக்கின்றனர் என்று ஆக்ஸ்ஃபாம் அறிக்கை கூறுகிறது.
No comments:
Post a Comment