Wednesday, 8 August 2012

குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: அன்சாரி வெற்றிப் பெறுகிறார்!



Ansari 'favourite to win' vice presidential election
புதுடெல்லி:14-வது குடியரசு துணைத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு இன்று (செவ்வாய்க் கிழமை) நடைபெற உள்ளது. ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் வேட்பாளரான தற்போதைய துணை குடியரசுத் தலைவர் ஹாமித் அன்சாரி மீண்டும் வெற்றி பெற்று துணைக் குடியரசு தலைவராக பதவியேற்க உள்ளார்.
அன்சாரியை எதிர்த்து தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக ஜஸ்வந்த்சிங் போட்டியிடுகிறார். அன்சாரிக்கு ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் உள்ள கட்சிகள், கூட்டணியை சாராத சில கட்சிகள், இடதுசாரிக் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
மக்களவை, மாநிலங்களவையைச் சேர்ந்த 788 எம்.பி.க்கள் இந்தத் தேர்தலில் வாக்களிக்கத் தகுதியானவர்கள். இவர்களில் 500 பேரின் வாக்குகள் அன்சாரிக்கு ஆதரவாகக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. காங்கிரசுக்கு மட்டும் மக்களவையில் 204 உறுப்பினர்களும்; மாநிலங்களவையில் 71 பேரும் உள்ளனர். திரிணமூல் காங்கிரசுக்கு மக்களவையில் 19 பேரும், மாநிலங்களவையில் 9 பேரும் உள்ளனர். திமுகவுக்கு மக்களவையில் 18 பேரும் மாநிலங்களவையில் 7 பேரும் உள்ளனர்.
அன்சாரிக்கு ஆதரவு தெரிவித்துள்ள சமாஜ்வாதி கட்சிக்கு மக்களவையில் 22 உறுப்பினர்களும், மாநிலங்களவையில் 9 பேரும் உள்ளனர். பகுஜன் சமாஜ கட்சிக்கு மக்களவையில் 21 பேரும் மாநிலங்களவையில் 15 பேரும் உள்ளனர்.
ஜஸ்வந்த் சிங்குக்கு பாஜகவின் மக்களவை உறுப்பினர்கள் 114 பேரின் ஆதரவு உள்ளது. மாநிலங்களவையில் பாரதிய ஜனதா கட்சியின் பலம் 49 ஆகும். ஐக்கிய ஜனதா தளத்துக்கு மக்களவையில் 20 பேரும் மாநிலங்களவையில் 9 பேரும் உள்ளனர். சிவசேனைக்கு மக்களவையில் 11 பேரும் மாநிலங்களவையில் 4 பேரும் உள்ளனர்.
பாராளுமன்றத்தில் மொத்தம் 14 உறுப்பினர்களைக் கொண்டுள்ள அதிமுக தனது ஆதரவை ஜஸ்வந்த் சிங்குக்கு வழங்குவதாக திங்கள்கிழமை அறிவித்துள்ளது.
பாராளுமன்றத்தில் 25 உறுப்பினர்களைக் கொண்டுள்ள பிஜு ஜனதா தளம் கட்சி குடியரசு துணைத் தலைவர் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக சமீபத்தில் அறிவித்தது.

No comments:

Post a Comment